இலங்கை நாடாளுமன்ற தேர்தல் வேட்புமனுத் தாக்கல் முடிவு: குருநாகல்- ராஜபக்சே, கொழும்பு- ரணில் போட்டி!!
கொழும்பு: இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் முடிவடைந்துள்ளது. அந்நாட்டின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே குருநாகல் மாவட்டத்திலும் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கொழும்பு மாவட்டத்திலும் போட்டியிடுகின்றனர்.
225 உறுப்பினர்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்துக்கு புதிய எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆகஸ்ட் 17-ந் தேதி நடைபெறவுள்ளது. இத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 6-ந் தேதி தொடங்கியது. இன்று நண்பகல் 12 மணி வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

குருநாகலில் ராஜபக்சே
இத்தேர்தலில் குருநாகலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
அதேபோல் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளராக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகிறார்.

ராஜபக்சே குடும்பத்தின் வேட்பாளர்கள்
மேலும் மகிந்த ராஜபக்சே குடும்பத்தைச் சேர்ந்த சமல் ராஜபக்சே, நிருபமா தீபிகா ராஜபக்சே, நமல் ராஜபக்சே ஆகியோரும் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இவர்கள் ராஜபக்சேவின் சொந்த மாவட்டமான அம்பந்தோட்டாவில் போட்டியிடுகின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் மாவை சேனாதிராசா, சுமந்திரன், சுரேஸ் பிறேமச்சந்திரன், சித்தார்த்தன், சிறீதரன், சரவணபவன், மதினி நெல்சன் உள்ளிட்டோர் யாழில் களமிறங்குகின்றனர்.
மேலும் வன்னியிக் செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், றோய் ஜெயக்குமார், முல்லைத் தீவில் விநோநோகராதலிங்கம், சாந்தி சிறிஸ்கந்தராஜா, கந்தையா சிவநேசன், மன்னாரில் சாள்ஸ் நிர்மலநாதன் உள்ளிட்டோரும் போட்டியிடுகின்றனர்.
மட்டக்களப்பில் பொன் செல்வராஜா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், இரா.துரைரெத்தினம், கோ.கருணாகரன். சிறிநேசன் உள்ளிட்டோரும் போட்டியிடுகின்றனர்.

முன்னாள் புலிகள்...
மூத்த தமிழ் ஊடகவியலாளர் வித்தியாதரன் தலைமையில் முன்னாள் விடுதலைப் புலிகள் பலர் இணைந்து உருவாக்கிய ஜனநாயக போராளிகள் கட்சியும் நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ளது. யாழ்ப்பாணம், வன்னியில் இக் கட்சியின் வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இதேபோல் இலங்கையின் முன்னாள் கணக்கு தணக்கு தலைமை அதிகாரி சரத் சந்திரசிறி, ஜே.வி.பி. வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications