இலங்கை அதிபர் தேர்தல்: ராஜபக்சே, மைத்திரிபால சிறிசேன வேட்புமனுத் தாக்கல்
கொழும்பு: இலங்கை அதிபர் மூன்றாவது முறையாக போட்டியிடும் அதிபர் மகிந்த ராஜபக்சே இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அவரை எதிர்த்துப் போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இலங்கையில் அதிபர் தேர்தல் ஜனவரி 8-ந் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் 3வது முறையாக ராஜபக்சே போட்டியிடுகிறார். அவர் இன்று இலங்கை தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவிடம் தமது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

இதேபோல் ராஜபக்சேவை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள சந்திரிகா ஆதரவாளர் மைத்ரிபால சிறிசேனவும் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
இவர்கள் இருவரைத் தவிர மேலும் 17 பேரும் அதிபர் தேர்தலுக்கான வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
இத்தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications