இந்தியா, சீனா உதவியுடன் இலங்கை ராணுவத்தை நவீனமயமாக்குவோம்.... ரணில் விக்ரமசிங்க
கொழும்பு: இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் இலங்கை ராணுவம் நவீனமயமாக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை ராணுவத்தில் பயிற்சியை நிறைவு செய்த சில படைப்பிரிவுகளின் ராணுவ அணிவகுப்பு தியாதலாவா நகரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ராணுவ அனுவகுப்பு மரியாதையை ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டு உரையாற்றினார்.

அப்போது, ஆசிய கண்டத்தில் இந்தியா, ஜப்பான் நாடுகளுக்கு அடுத்த படியாக பழமையானது இலங்கை ராணுவம். பாதுகாப்புத்துறையில் வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுடன் நல்லுறவு பேணி வருகிறது. மேலும் இந்தியா சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் நல்லுறவு பேணுவது மட்டுமின்றி, இணைந்து செயல்படுவோம்.
வரும் 2025-ம் ஆண்டுக்குள் இலங்கை ராணுவத்தை நவீன மயமாக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் மேற்கொள்ளப்படும். கடந்த 30 ஆண்டுகளாக இலங்கை ராணுவம் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு அதில் மிகப்பெரிய வெற்றியும் கண்டுள்ளது. நாட்டுக்காக தங்களது உயிரை தியாகம் செய்த வீரர்களுக்கு எனது பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் தியாகம் போற்றி, பாதுகாக்கப் பட வேண்டும். ராணுவ வீரர்களின் இந்த உழைப்பு பாராட்டுதலுக்குரியது.
ஆனால், ராணுவம் முயன்று பெற்ற இந்த வெற்றியை தங்களுடைய சொந்த அரசியல் செல்வாக்காக மகிந்த ராஜபக்சே காட்ட முயற்சிக்கிறார் என்றார்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications