இந்தியா, சீனா உதவியுடன் இலங்கை ராணுவத்தை நவீனமயமாக்குவோம்.... ரணில் விக்ரமசிங்க
கொழும்பு: இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் இலங்கை ராணுவம் நவீனமயமாக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை ராணுவத்தில் பயிற்சியை நிறைவு செய்த சில படைப்பிரிவுகளின் ராணுவ அணிவகுப்பு தியாதலாவா நகரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ராணுவ அனுவகுப்பு மரியாதையை ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டு உரையாற்றினார்.

அப்போது, ஆசிய கண்டத்தில் இந்தியா, ஜப்பான் நாடுகளுக்கு அடுத்த படியாக பழமையானது இலங்கை ராணுவம். பாதுகாப்புத்துறையில் வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுடன் நல்லுறவு பேணி வருகிறது. மேலும் இந்தியா சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் நல்லுறவு பேணுவது மட்டுமின்றி, இணைந்து செயல்படுவோம்.
வரும் 2025-ம் ஆண்டுக்குள் இலங்கை ராணுவத்தை நவீன மயமாக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் மேற்கொள்ளப்படும். கடந்த 30 ஆண்டுகளாக இலங்கை ராணுவம் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு அதில் மிகப்பெரிய வெற்றியும் கண்டுள்ளது. நாட்டுக்காக தங்களது உயிரை தியாகம் செய்த வீரர்களுக்கு எனது பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் தியாகம் போற்றி, பாதுகாக்கப் பட வேண்டும். ராணுவ வீரர்களின் இந்த உழைப்பு பாராட்டுதலுக்குரியது.
ஆனால், ராணுவம் முயன்று பெற்ற இந்த வெற்றியை தங்களுடைய சொந்த அரசியல் செல்வாக்காக மகிந்த ராஜபக்சே காட்ட முயற்சிக்கிறார் என்றார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications