அனுராதபுரத்தை தொடர்ந்து கொழும்பு சிறைச்சாலையிலும் தமிழ் கைதிகள் உண்ணாவிரதம்
கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இன்று (புதன்கிழமை) ஒருநாள் அடையாள உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு அனுராதபுரத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர், கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று (புதன்கிழமை) 6ஆவது நாளாக தொடர்கிறது. தமக்கு எதிராக வழக்குகளைப் பதிவு செய்து, சட்ட நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
இந்த கோரிக்கைகளுக்கும், அனுராதபுரம் சிறைக்கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் கொழும்பிலுள்ள மெகசின் சிறைக்கைதிகள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று நடத்துவதாக கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய அமைப்பின் செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்தார்.
- சாகும்வரை உண்ணாவிரதம்: வாழ்வா சாவா போராட்டத்தில் இலங்கை தமிழ் கைதிகள்
- "நான் தமிழன்... விடுதலைப் புலிகள் தோற்க வேண்டும் என்று நினைத்தேன்"
இதுகுறித்து பி.பி.சி. தமிழிடம் விவரித்த அருட்தந்தை சக்திவேல்,''கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் 60க்கும் மேற்பட்டோர் இன்று ஒருநாள் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று முன்னெடுக்கப்படும் அடையாள போராட்டம் மஞ்சள் எச்சரிக்கையாகும். இது சிவப்பாக மாறிவிடக்கூடாது. இது பச்சையாக மாற வேண்டும். தமிழ் அரசியல் கைதிகள் இனிமேலும் ஏமாற்றப்படக்கூடாது. அவர்கள் மீதான சட்டநடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறுதான் நாம் கோருகிறோம்.'' என்றார்.
தமிழ் அரசியல் கைதிகளுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை உள்ளதா என்று அருட்தந்தை சக்திவேலிடம் கேட்டோம்.
''2015ஆம் ஆண்டில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் கைதிகளுக்கு வாக்குகள் பலவற்றை வழங்கியுள்ளது. அவற்றை நிறைவேற்ற வேண்டிய காலகட்டத்திற்குள் கூட்டமைப்பு தள்ளப்பட்டுள்ளது. அரசாங்கத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது இணக்க அரசியலை செய்துவருகிறது. அடுத்த வருடம் முழுவதும் தேர்தல் காலம். அதனால் அனைத்துக் கட்சிகளும் தேர்தலை மையப்படுத்தியே காய்களை நகர்த்தும். அப்போது இணக்க அரசியலை முன்னிலைப்படுத்தாது, கட்சி அரசியலே முன்னிலைப்படுத்தப்படும்'' என்று அவர் கூறினார்.
''எனவே, தற்போது தான் அரசியல் கைதிகள் விவகாரத்தில் தீர்க்கமான முடிவு எடுக்க சிறந்த சந்தர்ப்பம் இருக்கிறது. தமிழ், சிங்கள மக்களுக்கிடையிலான நல்லிணக்கத்தின் அடையாளமாக தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். அரசாங்கம் துரிதமாக இதனைக் கையாள வேண்டும்.'' என்று மேலும் தெரிவித்தார்அருட்தந்தை சக்திவேல்.
தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக அனுராதபுரத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அறிவித்துள்ளனர்.
பிற செய்திகள்:
- ஏமன் போர்: '50 லட்சம் குழந்தைகள் பட்டினியால் பாதிப்பு'
- "என் வாழ்வின் ஒரு பாதி பிரனாய்" - கணவரை இழந்த அம்ருதா
- இலங்கை: ரயில் மோதி கர்ப்பிணி யானை உள்பட 3 யானைகள் பலி
- 'அம்ருதாவின் போராட்டத்துக்கு துணை நிற்பேன்' - கெளசல்யா
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக













Click it and Unblock the Notifications