ஆசியாவிலேயே தமிழகத்தில்தான் வறுமை அதிகம்- உணவுக்கே வழியில்லை: பசில் ராஜபக்சே திமிர் பதில்

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பசில் ராஜபக்சே, இலங்கையில் நடைபெறுகின்ற காமன்வெல்த் மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் கலந்துகொள்ளாததால் அந்நாடுதான் அதிக கவலைப்பட வேண்டும்.
இந்த மாநாடு இலங்கையின் மாநாடு அல்ல. இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மாநாட்டில் கலந்துகொள்ளாதது அவர்களது உள்நாட்டு அரசியல் பிரச்சினையே. அது பற்றி நாங்கள் எதுவும் சொல்வதற்கில்லை என்றார்.
காமன்வெல்த் மாநாட்டில் எவரும் கலந்து கொள்ள கூடாது என்ற தமிழக சட்டசபை தீர்மானம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், இலங்கையில் வாழும் தமிழ் மக்கள், தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களை விட அதிகம் அதிகம் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் சுதந்திரமாகவும் வாழ்கின்றனர்.
தமிழ்நாட்டில் வாழும் அதிகமான தமிழர்கள் உணவின்றி வாழ்கின்றனர். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா முதலில் அவர்களுக்கு உணவு கொடுத்துவிட்டு இலங்கை தமிழர்களை பார்க்கட்டும். ஆசியா நாடுகளிலேயே தமிழகத்தில்தான் வறுமையில் வாடுவோர் அதிகம். ஆனால் இலங்கையில் அப்படி இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications