இலங்கையில் இந்து கோவில்களை இடித்துவிட்டு பவுத்த விகாரைகள் கட்டுவதால் போராட்டங்கள்- பதற்றம்
யாழ்ப்பாணம்: இலங்கையில் ஈழத் தமிழர்களின் தாயகப் பகுதியான வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் இந்திய வம்சாவளி தமிழர்களின் மலையகம் ஆகியவற்றில் இந்து கோவில்களை இடித்துவிட்டு பவுத்த விகாரைகளை கட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவதால் போராட்டங்கள் வெடித்துள்ளன. தமிழர் வாழும் பகுதிகளில் அசாதாரண நிலை உருவாகி உள்ளது.
மலையகப் பகுதியான நுவரெலியாவில் கந்தப்பளை தோட்டப் பகுதியில் மாடசாமி காவல்தெய்வம் உள்ளது. இந்த கோவிலில் பொலநறுவையை சேர்ந்த பவுத்த பிக்கு பவுத்த கொடியை ஏற்றி வைத்திருக்கிறார்.

இதனைக் கண்டித்து மலையகத் தமிழர்கள் கண்டனப் போராட்டம் நடத்தி போலீசில் புகார் கொடுத்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பவுத்த கொடியை அகற்றினர்.
இதேபோல் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை கிண்ணியா வெந்நீரூற்று பிள்ளையார் கோவிலையும் ஆக்கிரமித்து பவுத்த விவகாரை அமைக்கும் பிரச்சனை பெரும் பதற்றமாக வெடித்துள்ளது. பிள்ளையார் கோவிலை இடித்து பவுத்த விகாரைகள் அமைப்பதற்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மேலும் வடக்கு மாகாணத்தில் முல்லைத் தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலையத்தில் பவுத்த விவகாரை அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிள்ளையார் கோவிலில் கட்டப்பட்ட நந்தி கொடிகளும் அறுக்கப்பட்டன.
இந்த விவகாரங்கள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தமிழ் எம்.பிக்கள் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சுவார்த்தையின் போது அடாவடியாக விகாரைகள் அமைக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வலியுறுத்தப்பட்டது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications