மைத்ரிபால அரசில் 9 தமிழர்களுக்கு அமைச்சர் பதவி! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சேரவில்லை!!
கொழும்பு: இலங்கையில் அதிபர் மைத்ரிபால சிறிசேன தலைமையிலான அரசில் 9 தமிழர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மைத்ரிபாலவை அதிபர் தேர்தலில் ஆதரித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைச்சரவையில் சேரவில்லை.
இலங்கையில் அதிபர் மைத்ரிபால சிறிசேன தலைமையிலான புதிய அமைச்சரவை நேற்று பதவியேற்றுக் கொண்டது. இதில் 9 தமிழர்கள் உட்பட 45 பேர் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டனர். அமைச்சர்களாக பதவியேற்ற தமிழர்கள்:
ரணிலின் ஐக்கிய தேசியக்கட்சியின் பொருளாளர் டி.எம். சுவாமிநாதன்- மீள்குடியேற்றம், மறுவாழ்வுத்துறை

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்- நகர அபிவிருத்தி
மலையக மக்கள் முன்னணியின் ராதாகிருஷ்ணன்- கல்வி
பைசஸ் முஸ்தபா - விமானப் போக்குவரத்துத்துறை
வேலாயுதம்: பெருந்தோட்ட கைத்தொழில் துறை
ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் கபீர் ஹாசிம்- முதலீட்டு ஊக்குவிப்பு துறை
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் பதியூதின் - தொழில், வர்த்தகத்துறை
தொழிலாளர் தேசிய சங்கத் தலைவர் பழனி திகாம்பரம்- தோட்ட உட்கட்டமைப்புத்துறை
விஜயகலா மகேஷ்வரன்- பெண்கள் விவகாரத்துறை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சேரவில்லை..
இருப்பினும் மைத்ரிபால சிறிசேன அரசில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சேரவில்லை. முன்னதாக மைத்ரி பால சிறிசேனவை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் நேற்று சந்தித்துப் பேசினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன், வடக்கு கிழக்கு மக்கள் எதிர்நோக்கி வரும் நிலப்பிரச்சனைகள், சிறையில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களின் விடுதலை, இனப்பிரச்சனைக்கான தீர்வு திட்டத்தில் ஏற்பட்டுள்ள தாமதம் உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம்.
இலங்கையில் பதவியேற்றுள்ள புதிய அமைச்சரவையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சேர்ந்துகொள்ளுவதற்கான உடனடி வாய்ப்பு இல்லை என்றார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications