இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனை நீக்குகிறது தமிழ் தேசிய கூட்டமைப்பு?
யாழ்ப்பாணம்: இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனை நீக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு துணைத் தலைவர் மாவை சேனாதிராஜா கூறியதாவது:

நாடாளுமன்ற தேர்தலின்போது விக்னேஸ்வரனின் நடவடிக்கைகள் கேள்விக்குறியாக இருந்தது. தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர் செயல்பாடுகள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக இருந்தன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களை ஆதரித்து ஓர் அறிக்கைகூட வெளியிடவில்லை. அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து வரும் 11-ந் தேதி நடக்கும் கட்சி செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.
இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். இதை வலியுறுத்தி இந்த மாத இறுதியில் மனித உரிமைகள் விசாரணைக்கான ஐ.நா. தூதரிடம் அறிக்கை அளிக்க உள்ளோம்.
இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் குறித்து நம்பத்தகுந்த குழு விசாரணை நடத்த வேண்டும். அதில் வெளிநாட்டு சட்ட நிபுணர்கள் மட்டுமே இடம்பெற வேண்டும்.
இவ்வாறு மாவை சேனாதிராஜா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications