நேற்று சர்ச் முன்பு நின்ற அதே கார்.. இலங்கையில் 9வது குண்டு வெடிப்பு.. ஷாக்கிங் வீடியோ வெளியானது!
இலங்கையில் கொச்சிக்கடாவில் கார் ஒன்றில் இன்று ஒன்பதாவது குண்டு வெடித்துள்ளது.
Recommended Video
கொழும்பு: இலங்கையில் கொச்சிக்கடாவில் நிகழ்ந்த ஒன்பதாவது குண்டு வெடிப்பு குறித்த பரபரப்பு வீடியோ வெளியாகி உள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களும் தற்போது வெளியாகி வருகிறது.
இலங்கை கொழும்புவில் நேற்று தொடர்ந்து பெரிய குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தது. நேற்று 3 தேவாலயங்கள், 4 ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது.
இந்த குண்டுவெடிப்பில் 300க்கும் அதிகமானோர் பலியானார்கள். இதில் மொத்தம் 450 பேர் படுகாயம் அடைந்தனர்.
|
கொச்சிக்கடாவில் மீண்டும்
இந்த நிலையில் இலங்கையில் தற்போது இன்னொரு பகுதியில் குண்டுவெடித்துள்ளது. நேற்று குண்டு வெடித்த கொச்சிக்கடாவில்தான் இன்றும் குண்டு வெடித்துள்ளது. அங்கிருக்கும் சர்ச்சுக்கு வெளியே இந்த குண்டு வெடித்துள்ளது. இந்த குண்டு வெடிப்பில் யாருக்கும் எந்த விதமான காயமும் ஏற்படவில்லை, உயிர் சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
|
என்ன வீடியோ
இந்த ஒன்பதாவது குண்டுவெடிப்பு அங்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அந்த கார் நிறுத்தப்பட்டு இருந்த பக்கத்தில் வீட்டில் உள்ள இளைஞர்கள் இதை வீடியோ எடுத்து இருக்கிறார்கள். இந்த வீடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து கூடுதல் தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.
|
அதே கார்
அதன்படி, இந்த கார்தான் நேற்று கொச்சிக்கடா பகுதியில் புனித ஆண்டனி சர்ச் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார் ஆகும். நேற்றே இது தொடர்பான வீடியோக்கள் வெளியானது. அதிலும் இந்த கார் இருந்தது. அதாவது நேற்று இந்த காரில்தான் வெடிகுண்டு வைத்த தீவிரவாதி சர்ச்சுக்கு வந்திருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
|
பெரிய அதிர்ச்சி
அந்த தீவிரவாதி, தான் வந்த காரிலும் வெடிகுண்டை வைத்துவிட்டு அவன் தேவாலயத்திற்குள் சென்று இருக்க வேண்டும் என்று போலீசார் கூறுகிறார்கள். அதுதான் தற்போது வெடித்துள்ளது. இந்த காரை மிக சரியான நேரத்தில் போலீசார் கண்டுபிடித்த காரணத்தால் மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு இருக்கிறது. இதில் யாரும் பலியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications