ஜெர்மனி கோர்ட்டில் இலங்கை மீது போர்க்குற்ற வழக்கு.. 11 நீதிபதிகள் விசாரிக்கப் போகிறார்கள்!
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கை ராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டது தொடர்பாக வரும் 7ஆம் தேதி ஜெர்மனியில் வழக்கு விசாரணை நடைபெறுகிறது. இந்த வழக்கை 11 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்க உள்ளது.
இலங்கைக்கு எதிரான இந்த வழக்கை வட அயர்லாந்தின் அரசு சார்பற்ற நிறுவனம் ஒன்றை நடத்திவரும் ஜூட் லால் பெர்ணான்டோ என்பவர் தொடர்ந்துள்ளார்.

அதில், ஒரு லட்சத்து 40 ஆயிரம் ஈழத் தமிழர்களை இலங்கை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த வழக்கில் 10 பேர் சாட்சியமளிக்க உள்ளனர். வழக்கின் தீர்ப்பு டிசம்பர் 10ஆம் அறிவிக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications