Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புலியை பார்த்து சூடு போட்ட பூனை! இந்தியா சறுக்கியது "இங்கேதான்".. மோசமாக தோற்றது எப்படி? 5 காரணங்கள்

Subscribe to Oneindia Tamil

சிட்னி: உலகக் கோப்பை டி 20 தொடரில் செமி பைனல் ஆட்டத்தில் தோல்வி அடைந்து இந்தியா மீண்டும் ஏமாற்றம் அளித்து உள்ளது. மீண்டும் டி 20 உலகக் கோப்பையை வெல்லும் இந்தியாவின் கனவு தகர்ந்து உள்ளது.

இன்று இங்கிலாந்துக்கு எதிராக நடந்த டி 20 உலகக் கோப்பை செமி பைனல் போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்து உள்ளது. மோசமான பவுலிங் காரணமாக இந்தியா படுதோல்வி அடைந்துள்ளது. இந்தியாவிற்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் இறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே நிதானமாக ஆடியது. கடைசியில் பாண்டியாவின் 63 ரன்கள் அதிரடியால் இந்திய அணி 168 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி அதிரடியாக ஆடி வெறும் 16 ஓவரில் 170 ரன்கள் எடுத்து வென்றது. பட்லர் 80, ஹேல்ஸ் 86 ரன்கள் எடுத்து இன்று அசத்தினர். இன்று இந்திய அணி தோல்வி அடைய 5 முக்கியமான காரணங்கள் உள்ளன.

காரணம் 1

காரணம் 1

இந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்தின் ஸ்லோ பந்துகள் பயன் அளித்தன. இதில் இங்கிலாந்து பவுலர்கள் ஸ்மார்ட் கேம் ஆடினார்கள். பொதுவாகவே ஜோர்டன் ஸ்லோ பால் போடுவார். இன்றும் அவர் ஸ்லோ யார்க்கர் வீசினார். அதேபோல் ஸ்பின் பவுலர்களும் மிகவும் மெதுவாக போட்டனர். இவர்கள் மெதுவாக அவுட் சைடில் பந்து வீசியதை இந்திய பேட்ஸ்மேன்களால் சரியாக அடிக்க முடியவில்லை. இதில் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறினார்கள்.

காரணம் 2

காரணம் 2

அதேபோல் மிடில் ஓவர்களில் இந்தியா போதுமான ரன் அடிக்கவில்லை. அடில் ரஷீத் 4 ஓவர் வீசி வெறும் 20 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இவரின் ஓவர் சிறப்பாக இருந்தது. இவர் மற்றும் ஜோர்டன் வீசிய ஸ்லோ பால் காரணமாக இந்திய பேட்ஸ்மேன்கள் கடுமையாக திணறினார்கள். முக்கியமாக ரோஹித் சர்மா பந்து சரியாக மாட்டாமல் இடையில் இடையில் கோபமாக கத்தினார்.16 ஓவர்கள் வரை இந்திய அணிக்கு பேட்டில் பந்து மாட்டவே இல்லை.

காரணம் 3

காரணம் 3

இந்திய அணியின் பவுலிங் இன்று மிக மோசமாக இருந்தது. இங்கிலாந்து அணி ஸ்லோ பந்துகளை போட்டு இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்தது. ஆனால் இந்திய அணியின் பலம் ஸ்விங்தான். அதை பின்பற்றாமல் இந்திய அணியும் ஸ்லோ பால் போட முயன்றது. ஆனால் இங்கிலாந்து அணியிடம் இந்த பவுலிங் எடுபடவில்லை. இந்தியா இன்று ஸ்விங் செய்யவே இல்லை. புலியை பார்த்து பூனை சூடு போட்டது போல இந்திய அணியின் பவுலிங் இருந்தது.

காரணம் 4

காரணம் 4

அதேபோல் இந்திய அணியின் கேப்டன்சியும் இன்று மிக மோசமாக இருந்தது. இந்திய பவுலர்கள் விக்கெட் எடுக்கவில்லை என்றதும் சரியாக பவுலர்களை ரொட்டேட் செய்து இருக்க வேண்டும். அதேபோல் அவரின் பீல்டிங் நிற்க வைத்த முறையும் மோசமாக இருந்தது. அவர் எடுத்த முடிவுகள் எல்லாமே இன்று சொதப்பலாக இருந்தது.

 காரணம் 5

காரணம் 5

நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் சிறப்பாக பீல்டிங் செய்தது. ஆனால் இன்று இந்திய வீரர்களுக்கு பீல்டிங் செய்வதில் க்ளுவே இல்லை. நிறைய குழப்பங்கள் மைதானத்தில் இருந்தது. வீரர்கள் ஒரு விதமான டென்சனோடுதான் இருந்தனர். ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே அவர்களிடம் ஒரு பதற்றம் இருந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+