தஞ்சம் கேட்டவர் தற்கொலை.. ஆஸ்திரேலியாவில் தொடரும் சோகம்
சிட்னி: ஆஸ்திரேலியாவில் மீண்டும் ஒரு தஞ்சக்கோரிக்கையாளர் தற்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிட்னியில் உள்ள Lakemba பகுதியில் அமைந்திருக்கும் பள்ளிவாசலில் தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட வங்கதேச தஞ்சக்கோரிக்கையாளர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

33 வயதான முகமது மோஷின் என்ற அத்தஞ்சக்கோரிக்கையாளர், 2013ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் படகு வழியாகதஞ்சமடைந்தவர். இணைப்பு விசாவில் வசித்த இவரின் தஞ்சமடையும் கோரிக்கை அண்மையில் நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. பொருளாதார ரீதியாக மோஷின் சிரமப்பட்ட காலத்தில் தன்னுடன் 6 மாதம் வசித்து வந்ததாகக் கூறுகிறார் அவரது நண்பரான முகமது அகமது.
"எங்களால் அவருக்கு உதவ முடியவில்லை. ஆனால், அவருக்கு நம்பிக்கை கொடுத்துக்கொண்டே இருந்தோம். ஒரு நாள் உனது நிலையை ஆஸ்திரேலிய குடியேற்றத்துறை புரிந்து கொள்ளும் என்றோம்." நண்பர்களின் உதவியை பெரிதும் நம்பி இருந்ததால் குற்றவுணர்ச்சியில் மோஷின் தனது வீட்டை வெளியேறிவிட்டதாகக் கூறுகிறார் முகமது அகமது.
இவ்வாறு, இணைப்பு விசாவில் வசிக்கும் ஆயிரக்கணக்கான தஞ்சக்கோரிக்கையாளர்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். நண்பர்கள் அல்லது அவர்களது சமுதாயத்தினரின் உதவியை நம்பியே பெரும்பாலான தஞ்சக்கோரிக்கையாளர்கள் உள்ளனர் என்கிறது Refugee Action Coalition என்ற அமைப்பு.
முகமது மோஷினின் மரணம், அரசின் தோல்வியடைந்த தஞ்சக்கோரிக்கை பரிசீலணை முறையின் எடுத்துக்காட்டும் மற்றுமொரு சோக நிகழ்வு. இவரது மரணம் அகதிகளிடையே துயரத்தை ஏற்படுத்தியுள்ளது," என்கிறார் அகதிகள் நல வழக்கறிஞரான ஐன் ரிண்டோல்.
அண்மையில், பிரிஸ்பேன் பகுதியில் முன்னாள் மனுஸ்தீவு அகதி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அடுத்தசில தினங்களுக்குள் மேலும் ஒரு தஞ்சக்கோரிக்கையாளர் மரணம் அடைந்திருப்பது பெரும் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications