அமெரிக்காவையே முந்தியது சீனா.. உலக நாடுகளுடன் ராஜதந்திர உறவுக்காக தூதர்களை நியமிப்பதில் செம்ம!
சிட்னி: உலக நாடுகளுடன் ராஜதந்திர உறவுகளை பேணுவதற்காக தூதர்களை நியமிக்கும் விஷயத்தில் அமெரிக்காவை முதல்முறையாக சீனா முந்தியுள்ளது.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஒட்டுமொத்தமாக 276 இடங்களில் ராஜதந்திர உறவுக்காக தூதர்களை சீன நியமித்திருப்பதாகவும் இது அமெரிக்காவை விட மூன்று இடம்அதிகம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
உலகில் ஒவ்வொரு நாடுமே மற்ற நாடுகளில் தங்கள் நாட்டின் சார்பில் தூதர்களை அனுப்பி அந்த நாட்டுடன் வர்த்தகம், வேலை வாய்ப்பு, அரசியல், உள்ளிட்டவற்றில் தங்கள் நாட்டுக்கு சாதகமான பயன்களை பெறுகின்றன. அந்த மாதிரி தூதர்களை நியமிப்பதில் சீனா தான் டாப் இடத்தில் இருக்கிறது.

விரைவான நெட்வொர்க்
ஆஸ்திரேலியாவின் லோவி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடுகளுக்கு தூதர்களை நியமிப்பதன் மூலம் விரைவான ராஜதந்திர நெட்வொர்க்குகளை உருவாக்குவதில் சீனா முன்னோடியாக உள்ளது. தைவானில் அண்மையில் தூதரகத்தை திறந்ததன் மூலம் இந்த நிலையை சீனா எட்டியுள்ளது.

அமரிக்காவை முந்தியது
"உலகளவில் 276 இடங்களில் தூதர்களை நியமித்ததன் மூலம், சீனா முதன்முறையாக அமெரிக்காவின் ராஜதந்திர நெட்வொர்கைவிட மூன்று இடத்தை பெற்று அந்த நாட்டை முறியடித்தது" என்று லோவி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்கா மூடியது
அமெரிக்கா புதிதாக தூதரங்களை திறக்கவில்லை, ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள தூதரகத்தை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது - பிரிட்டானில் ரஷ்ய முன்னாள் உளவாளி செர்ஜி ஸ்கிரிபால் விஷம் குடித்ததைத் தொடர்ந்து தூதர் வெளியேற்றம் நடந்தது.

சீனா முன்னேற்றம்
ஆனால் தூதரகம் வைத்திருப்பதற்கான மிகவும் பிரபலமான இடமாக அமெரிக்கா இருருக்கிறது.. இப்போது அதிலும் சீனாமுன்னேறி வருகிறது. அங்கு 61 நாடுகள் சீனாவில் 256 வெளிநாட்டு இராஜதந்திர தூதர்கள் என மற்றும் மொத்தம் 342 பதவிகளுக்கு ஆட்களை நியமித்துள்ளன.

ராஜதந்திரம்
இந்நிலையல் சீனா தூதர்களை நியமனம் செய்வதில் வளர்ந்து வந்தது, "புர்கினா பாசோ, டொமினிகன் குடியரசு, எல் சால்வடார், காம்பியா, மற்றும் சாவோ டோம் மற்றும் பிரின்சிப்பி - தைவான் போன்றவற்றில் தூதர்களை நியமித்துள்ளது. தூதர்களை நியமித்து ராஜதந்திர உறவை வளர்ப்பதன் மூலம் உலகின் ஒவ்வாரு நாட்டையும் தனது நாட்டின் பொருட்களை விற்கும் சந்தை மற்றும் வர்த்தக உறவுக்கு பெரிதும் சீனா மாற்றி வருகிறது. சீனா வர்த்தகத்தில் வளர ராஜதந்திர உறவும் முக்கிய காரணம் ஆகும்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications