Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆஸ்திரேலியாவில் பயங்கரம்.. போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் தமிழ்நாட்டை சேர்ந்தவர் பலி.. ஷாக் காரணம்!

ஆஸ்திரேலியாவில் உள்ள ரயில் நிலையத்தில் 2 போலீஸ்காரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் தமிழ்நாட்டை சேர்ந்தவர் குண்டுகள் பாய்ந்து பலியாகி உள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சிட்னி: ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி மேற்கு ரயில் நிலையத்தில் நேற்று தமிழ்நாட்டை சேர்ந்த முகமது ரகமத்துல்லா சையது அகமது என்பவரை 2 போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 2 குண்டுகள் நெஞ்சில் பாய்ந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் சிட்னி மேற்கு ரயில் நிலையத்தில் நடந்தது என்ன? போலீசார் எதற்காக தமிழ்நாட்டை சேர்ந்தவரை துப்பாக்கியால் சுட்டனர்? என்ற பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆஸ்திரேலியாவில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்று சிட்னி. இங்கு தமிழ்நாடு உள்பட இந்தியாவை சேர்ந்தவர்கள் ஏராளமானவர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். மேலும் தொழில் முறை பயணமாகவும் இந்தியர்கள் நிறைய பேர் ஆஸ்திரேலியாவில் உள்ளனர்.

இந்நிலையில் தான் நேற்று மதியம் 12.30 மணிக்கு சிட்னி மேற்குப்பகுதியில் உள்ள அபர்ன் ரயில் நிலையத்தில் ஏராளமான மக்கள் நின்று கொண்டிருந்தனர். இந்த வேளையில் திடீரென்று அங்கு பதற்றம் ஏற்பட்டது.

ரயில் நிலையத்தில் கத்திக்குத்து

ரயில் நிலையத்தில் கத்திக்குத்து

அதாவது ரயில் நிலையத்தில் தூய்மை பணி செய்து கொண்டிருந்த நபரை ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். இதனால் தூய்மை பணியாளர் ரத்தக்காயமடைந்த நிலையில் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அடுத்த 5 நிமிடத்தில் ரயில் நிலையம் சென்றனர். இதையடுத்து கத்தியால் குத்தி நபரை போலீசார் பிடிக்க முயன்றனர்.

உடலை துளைத்த 2 குண்டுகள்

உடலை துளைத்த 2 குண்டுகள்


அப்போது அந்த நபர் போலீஸ்காரர்களையும் கத்தியை காட்டி மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் போலீஸ்காரர்களை கத்தியால் குத்த முயன்றதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து 2 போலீசார் அந்த நபரை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் அந்த நபரின் நெஞ்சில் 2 குண்டுகள் பாய்ந்தது. இதனால் அவர் சரிந்து விழுந்தார்.

மருத்துவமனையில் உயிரிழப்பு

மருத்துவமனையில் உயிரிழப்பு

உடனடியாக அவர் மீட்கப்பட்டு ரயில் நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அந்த நபர் இறந்துவிட்டார். இதையடுத்து அவர் யார்? என்பது பற்றிய விசாரணை தொடங்கியது.

தமிழ்நாட்டை சேர்ந்தவர்

தமிழ்நாட்டை சேர்ந்தவர்

இந்த விசாரணையில் இறந்தவர் பெயர் முகமது ரகமத்துல்லா சையது அகமது என்பதும், அவர் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் என்பதும், அவருக்கு வயது 32 என்பதும் தெரியவந்தது. இவர் பிரிட்ஜிங் விசாவில் ஆஸ்திரேலியாவில் இருந்த நிலையில் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் இறந்ததாக தூதரக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இதுபற்றி இந்திய துணை தூதரகம் தரப்பில், ‛‛இந்த சம்பவம் மிகவும் கவலையளிக்கிறது. இது துரதிர்ஷ்டவசமானது. வெளியுறவு மற்றும் நியூ சவுத் வேல்ஸ் அலுவலக காவல்துறை அதிகாரிகளுடன் இதுபற்றி கேட்டு வருகிறோம். அறிக்கை தாக்கல் செய்யும்படி போலீசாரிடம் கேட்டுள்ளோம்'' என தெரிவித்துள்ளது.

போலீஸ் கூறுவது என்ன?

போலீஸ் கூறுவது என்ன?

இதுபற்றி நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை உதவி ஆணையர் ஸ்டூவர்ட் ஸ்மித் கூறுகையில், ‛‛இது அதிர்ச்சிகரமான சம்பவம். இருப்பினும் அதிகாரிகள் சுடுவதை தவிர வேறு வழியில்லாத நிலையில் இந்த முடிவை எடுத்துள்ளனர். அதிகாரிகளுக்கு நான் ஆதரவு அளிக்கிறேன். இதில் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும்'' என்றார். மேலும் அவரது தாக்குதலில் காயமடைந்த தூய்மை பணியாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் நேற்று சிட்னியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+