இன்றும், நாளையும் சலூன் கடைகள் திறந்திருக்கும்.. முழு ஊரடங்கு காலத்திலும் தடுப்பூசி போட தடையில்லை
சென்னை: தமிழகத்தில் முழு லாக்டவுன் நடைமுறைப்படுத்தப்படும் காலகட்டத்தில்கூட கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக பொதுமக்கள் வெளியே செல்லலாம் என்று அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளித்துள்ளார் . அதேபோன்று, இன்றும், நாளையும் நகர்ப் பகுதிகளிலும் சலூன் கடைகள் திறந்து வைத்துக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
Recommended Video
தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று உத்தரவு வெளியான நிலையில் அதில் மக்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.
குறிப்பாக சலூன் கடைகள் இன்றும் நாளையும் திறக்கப்படுமா, மேலும் ஊரடங்கு காலகட்டத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வெளியே செல்லலாமா என்பது போன்ற கேள்விகளை அவர்கள் முன்வைத்தனர். இது பற்றி அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது அவர்கள் விளக்கம் அளித்தனர்.
சமீபத்தில் தமிழக அரசு கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்தபோது மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் சலூன் கடைகள் திறப்பதற்கும் அழகு நிலையங்களைத் திறப்பதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்றும் நாளையும் சலூன் கடைகள் திறக்கலாம் என்று தமிழக அரசு அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக முழு ஊரடங்கில் அமேசான், பிளிப்கார்ட் செயல்பட முடியாது.. பல சரக்கு, உணவு சப்ளைக்குதான் அனுமதி
மேலும், கொரோனா தடுப்பூசி போட செல்வோர் முழு ஊரடங்கு காலத்திலும், தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். தடுப்பூசியை முன்பதிவு செய்து விட்டு செல்வதால், போலீஸ் வழிமறித்தால், அந்த ஆவணத்தை காட்டி விட்டு சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம், என்று தமிழக அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.