வைகை நதியோரம் 1 லட்சம் மரங்கள்.. 'பசுமை மானாமதுரை' இயக்கம் சபாஷ்
மானாமதுரை: வைகை நதி கரையின் இருபுறமும் கருவேல மரங்களை அகற்றிவிட்டு, ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு 'பசுமை மானாமதுரை' இயக்கம் முடிவு செய்து, தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

மணல் கொள்ளை, ஆக்கிரமிப்பு, செடிகள் மண்டுதல் போன்ற காரணங்களால் வைகை நதியில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதன் எதிரொலியாக, வைகை நதியை நம்பியுள்ள சிவகங்கை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளில் பாதிப்பு ஏற்படுகிறது.

கருவேல மரங்கள் அதிகப்படியான நிலத்தடி நீரை உரிஞ்சக் கூடியவை. இதை கருத்தில் கொண்டு, வைகை நதி கரையின் இருபுறமும் கருவேல மரங்களை அகற்றிவிட்டு, ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு 'பசுமை மானாமதுரை' இயக்கம் முடிவு செய்து, தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

எம்.எல்.ஏ மாரியப்பன் கென்னடி (அதிமுக), யூனியன் சேர்மன் மாரிமுத்து, பேரூராட்சி சேர்மன் ஜோசப் ராஜன், தாசில்தார் சிவகுமாரி போன்றோர் இதில் கலந்து கொண்டனர். விழாவுக்கு கலெக்டர் மலர் விழி தலைமை வகித்தார்.












Click it and Unblock the Notifications