வர்தா புயலால் "10,000 மின் கம்பங்கள் சேதம்” - மின்சார வாரியம் தகவல்
வர்தா புயலால் 10,000 மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதாக மின்சார வாரியம் கூறியுள்ளது.
சென்னை: சென்னையை மூன்று கட்டமாக தாக்கிய வர்தா புயலால் 10,000 மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் மையம் கொண்ட வர்தா புயல், மேற்குப் பகுதி- மையப் பகுதி- கிழக்குப் பகுதி என 3 கட்டங்களாக சென்னையை நேற்று பிற்பகலில் தாக்கியது. இப்புயல் பிற்பகல் 3 மணி முதல் 5 மணிக்குள் சென்னை துறைமுகம் அருகே கரையைக் கடந்தது.

புயலின் கோரத் தாண்டவத்தில் சிக்கிய சென்னை நகரம் பலத்த சேதத்தை சந்தித்துள்ளது. நகரின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் நேற்று முழுவதும் சென்னை நகரமே இருளில் மூழ்கியது. 2வது நாளாக பல இடங்களில் மின்விநியோகம் சரிசெய்யப்படாததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மின்சாரம் இல்லாததால் செல்போன் சேவை முற்றிலும் முடங்கியுள்ளது.

இந்தநிலையில் வர்தா புயலால் 10 ஆயிரம் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. 450 மின்மாற்றிகளும் சேதம் அடைந்துள்ளதாகவும் மின்வாரியம் அறிவித்துள்ளது. சென்னையில் உள்ள அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் செயல்படுகின்றன. மற்ற மாவட்டங்களில் இருந்து 7,000 மின்கம்பங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

சென்னைக்கு மின்சாரம் கொண்டு வரப்படும் 24 உயர்ந்த மின்கோபுரங்கள் சாய்ந்துள்ளதால் அதை சரிசெய்வதில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் 6,000 மின் ஊழியர்கள் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். வெளி மாவட்டங்களில் இருந்து 3000 ஊழியர்கள் கூடுதலாக வரவழைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது கே.கே.நகர், அம்பத்தூர், அண்ணாநகர், ராயப்பேட்டை, கோடம்பாக்கம், மாம்பலம், உயர்நீதிமன்றம், கோயம்பேடு, எம்எம்டிஏ ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் சரி செய்யப்பட்டுள்ளது. நகர் பகுதிகளில் இன்று இரவுக்குள் மின் விநியோகம் சீரடையும். புறநகர்ப் பகுதிகளில் 3 நாட்களுக்குள் முழுமையாக மின்சாரம் வழங்கப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications