சென்னையில் போலி பாஸ்போர்ட்கள் தயாரித்த 10 பேர் கைது.. 100 போலி பாஸ்போர்ட்டுகள் பறிமுதல்
போலி பாஸ்போர்ட்டுகள் தயார் செய்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video

சென்னை: சென்னையில் போலி பாஸ்போர்ட்டுகளை தயார் செய்த 10 பேர், போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 100 போலியான பாஸ்போர்ட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் சிலர் போலி பாஸ்போர்டுகளை தயார் செய்து பல்வேறு நபர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நடவடிக்கை மேற்கொண்ட போலீசார், குணாளன், சக்திவேல் உள்ளிட்ட 10 பேர் கைது செய்துள்ளனர்.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பாஸ்போர்ட்டுகளை போலியாக தயார் செய்து வழங்கி வந்திருப்பதும், இதுபோன்று போலி பாஸ்போர்ட்டுகளை தயார் செய்வதற்காகவே சென்னையில் பல்வேறு இடங்களில் அலுவலகம் வைத்தும் செயல்படுவதாகவும் தெரியவந்தது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட 10 பேர் கொண்ட கும்பலிடமிருந்து 100 பாஸ்போர்ட்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அத்துடன் இந்த விவகாரம் தொடர்பாக வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கும் என்பது குறித்து தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications