விரல்ல சுமக்கப் போற மைதான் தலையெழுத்தை எழுதப் போகிறது.. சசிக்குமார்
சென்னை: 'நம்ம விரல்ல சுமக்கப் போற மைதான் இந்த தேசத்தோட தலையெழுத்தை எழுதப் போகிறது. எனவே மறக்காமல் அனைவரும் ஓட்டுப் போடவேண்டும்' என நடிகர் சசிக்குமார் தெரிவித்திருக்கிறார்.
நாளை சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு 100% வாக்குப்பதிவிற்காக தேர்தல் ஆணையம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் நடிகரும், இயக்குநருமான சசிக்குமார் 100% வாக்குப்பதிவிற்காக குரல் கொடுத்திருக்கிறார். இதுகுறித்து அவர் "கிராமத்துல இருக்குற வயசான பாட்டிங்க கூட தட்டுத்தடுமாறி குச்சியை ஊன்றி ஓட்டுப்போடுறாங்க.
அந்தப் பொறுப்புணர்வைப் பார்த்தாவது நாம பக்குவப்பட வேண்டாமா? நம்ம விரல்ல சுமக்கப்போற மை தான் இந்த தேசத்தோட தலையெழுத்தை எழுதப்போகுது.
நூறு சதவீத வாக்குப்பதிவு சாத்தியமாகுற நாள்தான் ஜனநாயகத்துக்கான வெற்றி நாளாக இருக்கும்.மறக்காம எல்லோரும் ஓட்டுப்போடுங்க'' என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications