10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்
10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நெல்லையில் தொடங்கியது. இம்மாதம் 15ம் தேதிக்குள் விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைய உள்ளது.
திருநெல்வேலி: பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. இந்த பணிகளை இரு வாரங்களுக்குள் முடிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 8ம் தேதி பொது தேர்வு தொடங்கியது. நெல்லை மாவட்டத்தில் இந்த தேர்வை 23 ஆயிரத்து 560 மாணவிகள் உள்பட 46,199 பேர் எழுதியுள்ளனர். கல்வி மாவட்ட அளவில் நெல்லை கல்வி மாவட்டத்தில் 16,270, தென்காசி கல்வி மாவட்டத்தில் 15,093, சேரன்மகாதேவி கல்வி மாவட்டத்தில் 14,836 பேர் தேர்வு எழுதியுள்ளனர்.

மாற்று திறனாளிகள் தேர்வு எழுத சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மதுரை மத்திய சிறை கைதிகள் 20 பேரும், பாளை சிறை கைதிகள் 24 பேர் என மொத்தம் 44 கைதிகளும் தேர்வு எழுதியுள்ளனர். தேர்வு முடிந்ததை அடுத்து விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியுள்ளது.
ஒரு கல்வி மாவட்டத்துக்கு ஒரு விடைத்தாள் திருத்தும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட அளவில் பாளை ஜான்ஸ் பள்ளியிலும், சேரன்மகாதேவி கல்வி மாவட்ட அளவில் டவுன் சாப்டர் பள்ளியிலும், தென்காசி கல்வி மாவட்ட அளவில் மஞ்சம்மாள் மேல்நிலைப்பள்ளியிலும் விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது.
முன்னதாக விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு கல்வி மாவட்ட அலுவலர்கள் ஆலோசனை வழங்கினர். இந்த பணிகளை ஏப்ரல் 15ம் தேதிக்குள் முடிக்க ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications