நடராஜ் வருகையால் ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்வு!
மயிலாப்பூர் நடராஜ் அறிவிப்பைத் தொடர்ந்து ஓபிஎஸ் அணி ஆத்ரவு எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை: மயிலாப்பூர் எம்.எல்.ஏ. நடராஜ் ஆதரவைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை ஆதரிக்கும் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
அதிமுக ஓபிஎஸ் மற்றும் சசிகலா அணிகள் என இரண்டாக பிளவுப்பட்டுள்ளது. சசிகலா அணியின் எடப்பாடி பழனிச்சாமி தமக்கு 124 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளதாக கூறி முதல்வராக பதவியேற்றுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளார். இந்த நிலையில் மயிலாப்பூர் அதிமுக எம்.எல்.ஏ. நடராஜ் இன்று திடீரென ஓ. பன்னீர்செல்வத்தை ஆதரிப்பதாக அறிவித்துள்ளார்.
ஏற்கனவே ஓ. பன்னீர்செல்வம் அணியில் அவரையும் சேர்த்து 10 எம்.எல்.ஏக்கள் இருந்தனர். தற்போது மயிலாப்பூர் நடராஜன் ஆதரவைத் தொடர்ந்து ஆதரவு எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் விவரம்:
மாபா. பாண்டியராஜன்
எஸ்.பி.சண்முக நாதன்
மாணிக்கம்
வி.சி. ஆறுக்குட்டி
மனோரஞ்சிதம்
மனோகரன்
சரவணன்
சின்னராஜ்
செம்மலை
நடராஜ்