For Quick Alerts
For Daily Alerts
Just In
அரியலூர் அருகே விபத்து: 9 பெண்கள், 2 ஆண்கள் உட்பட 11 பேர் பலி
அரியலூர்: அரியலூர் உடையார்பாளையம் அருகே சரக்கு வாகனமும் லாரியும் மோதியதில் 9 பெண்கள், 2 ஆண்கள் உட்பட 11 பேர் பலியாகினர்.
அரியலூர் அருகே துக்க நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு சரக்கு வாகனத்தில் சிலர் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது உடையார்பாளையம் அருகே சரக்கு வாகனமும் லாரியும் நேருக்கு மோதியதில் விபத்து ஏற்பட்டது.
இதில் 9 பெண்கள், 2 ஆண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 10 பேர் ஜெயங்கொண்டம் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
English summary
11 persons is dead and in a Van and lorry crash Sunday night in near Ariyalur.