கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தூக்கி அடிக்கப்பட்ட 11 தாசில்தார்கள்.. கலெக்டர் அதிரடி உத்தரவு!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11 வருவாய் வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் எம். எஸ். பிரசாந்த் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 66 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அங்கு தாசில்தார்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11 வருவாய் வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் எம். எஸ். பிரசாந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி, கள்ளக்குறிச்சி வருவாய் வட்டாட்சியராக கமலக்கண்ணன், சின்னசேலம் வருவாய் வட்டாட்சியராக மனோஜ் முனியன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
வட்டாட்சியர்கள் மாற்றம் விவரம் வருமாறு:
1. கள்ளக்குறிச்சி வன நிர்ணய அலுவலராக இருந்த சசிகலா, சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2. சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியராக இருந்த கோபாலக்கிருஷ்ணன் சங்கராபுரம் தனி வட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.
3. சங்கராபுரம் தனி வட்டாட்சியராக இருந்த சத்தியநாராயணன் கள்ளக்குறிச்சி தனி வருவாய் வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

4. கள்ளக்குறிச்சி தனி வட்டாட்சியராக இருந்த அனந்தகிருஷ்ணன் உளுந்தூர்பேட்டை வருவாய் வட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.
5. உளுந்தூர்பேட்டை வருவாய் வட்டாட்சியராக இருந்த விஜயபிரபாகரன், கள்ளக்குறிச்சி தனி வட்டாட்சியராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
6. கள்ளக்குறிச்சி தனி வட்டாட்சியராக இருந்த பாலகுரு, வாணாபுரம் வருவாய் வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்

7. வாணாபுரம் வருவாய் வட்டாட்சியராக இருந்த குமரன், கள்ளக்குறிச்சி அலுவலக மேலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
8. கள்ளக்குறிச்சி அலுவலக மேலாளராக இருந்த அனந்தசயனன், கள்ளக்குறிச்சி தனி வட்டாட்சியாராக (ஆலய நிலங்கள்) நியமிக்கப்பட்டுள்ளார்
9. கள்ளக்குறிச்சி தனி வட்டாட்சியாராக (ஆலய நிலங்கள்) இருந்த மனோஜ் முனியன், சின்னசேலம் வருவாய் வட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.
10. சின்ன சேலம் வருவாய் வட்டாட்சியராக இருந்த கமலக்கண்ணன், கள்ளக்குறிச்சி வருவாய் வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
11. கள்ளக்குறிச்சி வருவாய் வட்டாட்சியராக இருந்த பிரபாகரன், கள்ளக்குறிச்சி (வன நிர்ணய அலுவலகம்) தனி வட்டாட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த பணி மாறுதல்கள் குறித்து எந்தவித மேல்முறையீடோ, விண்ணப்பமோ ஏற்றுக்கொள்ளப்படாது என்றும், புதிய பணி இடத்தில் உடனடியாக சேரவில்லை என்றால் அரசு விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications