12 டி.எஸ்.பிக்கள் அதிரடி மாற்றம் – டிஜிபி அசோக்குமார் உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகக் காவல் துறையில் 12 டி.எஸ்.பி.க்களை பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி அசோக்குமார் நேற்று உத்தரவிட்டார்.

சென்னை பெருநகரக் காவல் துறையில் பணிபுரியும் உதவி ஆணையர்கள் கண்ணன், ஜெ.அய்யப்பன், பி.கோவிந்தராஜூ, ஜி.ரவிசங்கர், இ.கோபி ஆகியோர் பெருநகர காவல் துறைக்குள்ளேயே பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல, திருநெல்வேலி நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையர் ஸ்டான்லி ஜோன்ஸ் உள்ளிட்டோர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பணியிட மாற்றம் செய்யப்பட்ட டி.எஸ்.பி.க்கள் ஓரிரு நாள்களில் புதிய பணியை ஏற்பார்கள் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications