திருவல்லிக்கேணியில் 12-மாத ஆழ்வார்கள் சிறப்பு நிகழ்ச்சிகள்
சென்னை: ஆழ்வார்களின் பெருமையை மக்களுக்கு உணர்த்தும் வகையில் சென்னை 2000 + அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் இனைந்து 12-மாத ஆழ்வார்கள் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர். இதன் துவக்க விழா சென்னை திருவல்லிகேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலில் ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 22 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1) பொய்கை ஆழ்வார், 2) பூதத்தாழ்வார், 3) பேயாழ்வார், 4) திருமழிசை ஆழ்வார், 5) நம்மாழ்வார், 6) திருமங்கையாழ்வார், 7) தொண்டரடிப் பொடி ஆழ்வார், 8) பெரியாழ்வார், 9) ஸ்ரீ ஆண்டாள்
10) குலசேகர ஆழ்வார், 11) மதுரகவி ஆழ்வார், 12) திருப்பாணாழ்வார். இவர்களுள் பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் மற்றும் பேயாழ்வார் மூவரையும் முதல் ஆழ்வார்கள் என்று குறிப்பது வழக்கம்.

ஒவ்வொரு ஏகாதசி அன்றும், ஒரு ஆழ்வாரைப் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும். இப்படியாக 12 ஆழ்வார்களைப் பற்றிய சிறப்பு நிகழ்சிகள் 2016 ஆண்டு இறுதி வரை நடத்தப்படும்.
முதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 22 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும். இதில் பொய்கை ஆழ்வாரைப் பற்றி ஒரு சிறப்பு சொற்பொழிவு நடத்தப்படும். சொற்பொழிவை டாக்டர் எம் எ வேங்கட கிருஷ்ணன் அவர்கள் வழங்குவார்கள்.
கி.பி. 7ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் பொய்கை ஆழ்வார். சித்தார்த்த வருடம் ஐப்பசி மாதம் 1 திருவோண நட்சததிரத்தில், காஞ்சிபுரத்தில் பிறந்தார். முதல் ஆழ்வார்களுள் ஒருவர். மஹாவிஷ்ணுவின் ஐந்து ஆயுதங்களில் ஒன்றான திருச் சங்கின் அம்சமாக இவர் கருதப்படுகிறார். திருவெஃகா என்பது காஞ்சிபுரத்தின் ஒரு பகுதி. விஷ்ணு காஞ்சி என்றழைக்கப்படும் இத்திருத்தலத்தில் யதோத்தகாரி என்ற பெருமாள் கோயிலின் பொய்கையில், இவர் ஒரு பொற்றாமரையில் அவதரித்ததாகவும், அதனாலேயே இவருக்குப் பொய்கையாழ்வார் என்று பெயர் வந்ததாகவும் கூறுவர்.












Click it and Unblock the Notifications