Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆர்.கே நகர் தேர்தல்.. இதுவரை 124 பேர் மீது வழக்கு பதிவு.. 30 லட்சம் பறிமுதல் !

ஆர்.கே நகரில் இதுவரை ரூ. 30,48,382 பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்.கே நகரில் இதுவரை ரூ. 30,48,382 பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது. மக்கள் கொடுத்த பல்வேறு புகார்கள் மீதான நடவடிக்கை குறித்தும் தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.

சென்னை ராதாகிருஷ்ணன் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்காக நடந்த தீவிர பிரச்சாரம் தற்போது முடிந்து இருக்கிறது.

124 cases has filed in RK nager for election

இந்த நிலையில் இந்த தேர்தலில் அளிக்கப்பட்ட புகார்கள் குறித்து தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்து இருக்கிறது. அதன்படி தேர்தல் ஆணையத்திடம் இதுவரை 124 புகார்கள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த புகார்களில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஆர்.கே.நகரில் அனுமதியின்றி வந்த 83 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் ஆர்கே நகரில் தேர்தல் அறிவிப்பிற்கு பின் இதுவரை ரூ. 30,48,382 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+