அரியலூர் அருகே நடந்த சாலை விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13ஆக உயர்வு
திருச்சி: அரியலூர் மாவட்டம் கச்சிப்பெருமாள் என்னும் ஊரைச் சேர்ந்த 25பேர் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள புதுக்குடியில் உறவினரின் துக்க நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு மினி லாரியில் நேற்று இரவு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
புதுக்குடி பிரிவில் இருந்து ஜெயங்கொண்டம் சாலைக்குத் திரும்பும் போது ஜெயங்கொண்டம் நோக்கிச் சென்ற லாரி, மினிலாரி மீது மோதியது. இதில் மினி லாரியில் இருந்த 3பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த 22பேர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். இவர்களில் சிகிச்சை பயனின்றி 8பேர் அங்கு உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் 12 பேர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அன்னம்மாள், வளர்மதி ஆகியோர் உயிரிழந்ததை அடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் 11 பேர் பெண்கள், 2பேர் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications