சென்னை: சிறார் சிறையில் இருந்து 14 பேர் மீண்டும் தப்பி ஓட்டம் – 2 பேர் பிடிபட்டனர்
சென்னை: சென்னை சிறுவர் சிறுமியர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 14 சிறுவர்கள் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் பிடிபட்ட இருவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை கெல்லீஸ் பகுதியில் சிறுவர் சிறுமியர் கூர்நோக்கு இல்லம் உள்ளது. அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த சிறார்களில் 14 பேர், காப்பாளர் விஜயகுமாரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
இது தொடர்பாக தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்து தப்பியோடியவர்களை போலீசார் தேடி வந்தனர். இதில் இருவர் கொடுங்கையூர் குப்பை கிடங்கு அருகே மீட்கப்பட்டனர். அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் 12 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்த கூர்நோக்கு இல்லத்தில், இந்த வருடத்தில் மட்டும் 3வது முறையாக சிறார்கள் தப்பியோடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகம் முழுவதும் குற்றவழக்குகளில் கைது செய்யப்படும் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் இங்கு அடைக்கப்படுகின்றனர். போதிய காவலர்கள் பணியில் இல்லாததன் காரணமாக, சிறுவர்கள் தப்பி ஒடியதாக கூறப்படுகிறது. சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு உரிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி, அதிகளவு காவலர்களை நியமிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த பத்து தினங்களுக்கு முன்னர் செங்கல்பட்டு அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 17 சிறுவர்கள் தப்பி ஓடினர். இதில் இருவர் மட்டுமே பிடிப்பட்டனர். மாயமான 15 பேரை பற்றி எந்த தகவலும் இல்லை. இந்த நிலையில் சென்னையில் 15 சிறார் குற்றவாளிகள் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications