சென்னை: சிறார் சிறையில் இருந்து 14 பேர் மீண்டும் தப்பி ஓட்டம் – 2 பேர் பிடிபட்டனர்
சென்னை: சென்னை சிறுவர் சிறுமியர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 14 சிறுவர்கள் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் பிடிபட்ட இருவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை கெல்லீஸ் பகுதியில் சிறுவர் சிறுமியர் கூர்நோக்கு இல்லம் உள்ளது. அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த சிறார்களில் 14 பேர், காப்பாளர் விஜயகுமாரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
இது தொடர்பாக தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்து தப்பியோடியவர்களை போலீசார் தேடி வந்தனர். இதில் இருவர் கொடுங்கையூர் குப்பை கிடங்கு அருகே மீட்கப்பட்டனர். அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் 12 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்த கூர்நோக்கு இல்லத்தில், இந்த வருடத்தில் மட்டும் 3வது முறையாக சிறார்கள் தப்பியோடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகம் முழுவதும் குற்றவழக்குகளில் கைது செய்யப்படும் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் இங்கு அடைக்கப்படுகின்றனர். போதிய காவலர்கள் பணியில் இல்லாததன் காரணமாக, சிறுவர்கள் தப்பி ஒடியதாக கூறப்படுகிறது. சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு உரிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி, அதிகளவு காவலர்களை நியமிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த பத்து தினங்களுக்கு முன்னர் செங்கல்பட்டு அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 17 சிறுவர்கள் தப்பி ஓடினர். இதில் இருவர் மட்டுமே பிடிப்பட்டனர். மாயமான 15 பேரை பற்றி எந்த தகவலும் இல்லை. இந்த நிலையில் சென்னையில் 15 சிறார் குற்றவாளிகள் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications