பசுபதிபாண்டியன் நினைவு தினம்... தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு!
மறைந்த பசுபதி பாண்டியன் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி : பசுபதி பாண்டியன் நினைவு தினத்தை ஓட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் 144 தடை உத்தரவு அமுலில் இருக்கும் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் அலங்காரதட்டு பகுதியில் நாளை 10ம் தேதி தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு நிறுவனர் பசுபதி பாண்டியன் நினைவு தினம் வருகிறது. இதையொட்டி அசம்பாவிதம் இல்லாமல் தடுக்கவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் இன்று மாலை முதல் 11ம் தேதி மாலை 6 மணி வரை குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 144 கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையின் போது தூத்துக்குடி மாவட்டத்திலும் பிற பகுதிகளிலிருந்து விழாவில் கலந்து கொள்ளும் பொது மக்கள் 5 பேருக்கு மேல் கூடுவதற்கும், ஜோதி எடுத்து வருவதற்கும், ஊர்வலம் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயுதங்கள், கட்சி, சமுதாய கொடிகள் கொண்டு வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களில் ஆட்களை ஏற்றி வருவதற்கும், அன்னதானம் வழங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு பள்ளி வாகனங்கள், தினசரி வாகனங்கள், அத்திவாசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள், சுற்றுலாவுக்காக வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள், ஆம்னி பஸ் ஆகியவற்றுக்கு பொருத்தாது. இந்த நாட்களில் வேறு ஏதேனும் கூட்டங்கள் நடத்த வேண்டி இருந்தால் தூத்துக்குடி மாவட்ட எஸ்பியை அணுகி அனுமதி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications