Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

7 நாட்களுக்கு பின்னர் மெரினாவில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு வாபஸ்: கமிஷனர் ஜார்ஜ்

நிலைமை கட்டுக்குள் உள்ளதால் மெரினாவில் பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்படுகிறது என்று கமிஷனர் ஜார்ஜ் அறிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

ன்னை: சென்னை மெரினா கடற்கரையில் ஜனவரி 29-ம் தேதி முதல் பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்படுவதாக மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள் சென்னை மெரினாவில் ஒரு வாரத்திற்கும் மேலாக புரட்சி போராட்டம் நடத்தினர். இதையடுத்து மெரினாவில் அனுமதியின்றி போராட்டம் நடைபெறுவதை தடுக்கும் வகையில் அங்கு 144 தடை ஆணை பிறப்பிக்கப்பட்டது.

144 rule withdraw from in marina

இதன்படி, மெரினா, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம் உட்பட 6 இடங்களில் 144 தடை உத்தரவு ஜனவரி 29ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த தடை உத்தரவு பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் கடற்கரை பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்கு தடை உத்தரவில் இருந்து விலக்கி கொள்ளப்பட்டது.

இந்நிலையில், சென்னை மெரினாவில் பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ளது. நிலைமை கட்டுப்பாட்டிற்குள் இருப்பதால் தடை உத்தரவு திரும்ப பெறப்படுவதாக சென்னை காவல் துறை ஆணையர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், சென்னை மாநகர சட்டப்பிரிவு 41-கீழ் அனுமதி இன்று மெரினாவில் கூடுவது, கூட்டம் நடத்துவதற்கு பழைய கட்டுப்பாடுகள் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மெரினா பகுதியில் போடப்பட்டிருந்த தடை உத்தரவு 7 நாட்களுக்கு பின்னர் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+