For Daily Alerts
Just In
பள்ளி வேனுடன் பயங்கரமாக மோதிய பஸ்... 16 பேர் படுகாயம்
திண்டிவனம்: திண்டிவனம் அருகே பள்ளி வேனும், அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
அதிர்ஷ்டவசமாக இதில் உயிரிழப்பு ஏதும் இல்லை. ஆனால் 16 பேர் படுகாயமடைந்தனர். அனைவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைரவபுரம் என்ற இடத்திற்கு அருகே இந்த விபத்து நடந்தது. வேகமாக வந்த அரசுப் பேருந்தும், எதிர் முனையில் வந்த பள்ளி வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் பள்ளி வேன் டிரைவர் மிகவும் மோசமா்ன காயமடைந்தார்.
விபத்தில் 16 பேர் காயமடைந்தனர். அனைவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Comments
English summary
16 persons were injured as a school van, bus clash near Tindivanam .
Story first published: Wednesday, February 5, 2014, 12:41 [IST]