மிரட்டும் டெங்கு: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 16 பேர் பலி
டெங்கு காய்ச்சலின் கோர பசிக்கு இன்று ஒரே நாளில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று டெங்கு காய்ச்சலுக்கு 16 பேர்வரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு டெங்கு பாதிப்பு அதிகமாக இருக்கிறது. தமிழகம் முழுவதும் பரவலாக காய்ச்சல் பாதிப்பு 25 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அதே போல் டெங்கு காய்ச்சல் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கான வார்டுகள் அனைத்தும் டெங்கு காய்ச்சல் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. தமிழகத்தில் அக்டோபர் 15ம் தேதி வரை 40 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளதாகவும், 12,945 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு மத்திய அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது.
டெங்கு காய்ச்சலுக்கு இன்று ஒரே நாளில் 16 பேர் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மதுரையில் 10 வயது சிறுவன் கிருஷ்ணராஜ், திருச்சியை சேர்ந்த கிருத்தியா ஆகியோர் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தனர்.
மதுரை பேச்சியம்மன் படித்துறையைச் சேர்ந்த தேவி, திருக்காட்டு பள்ளியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 16 பேர் இன்று டெங்குவின் கோரப்பசிக்கு இரையாகியுள்ளனர்.
டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினாலும், டெங்குவிற்கு பலியாகும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications