தாய்லாந்து சிறையில் தத்தளித்த 17 தமிழர்கள் தாய்நாடு திரும்பினர்,,, உறவினர் மகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விசா முடிந்த பின்னும் தாய்லாந்தில் இருந்ததால் கைது செய்யப்பட்டிருந்த 17 தமிழர்கள் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை மூலமாக மீட்கப்பட்டு தமிழகம் கொண்டு வரப்பட்டுள்ளனர். இதனால் அவர்களது உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த மே மாதம் 4ம் தேதி திருச்சி, கோவை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 17 தமிழர்கள் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா விசாவில் சென்றுள்ளனர்.

17 Detained tamils return from Thailand

இவர்கள் அனைவரும் தங்களது விசா காலம் முடிந்ததும் தமிழகத்திற்கு திரும்பி வராமல் அங்கேயே இருந்துள்ளனர். இதனைக் கண்டறிந்த தாய்லாந்து போலீசார், 17 பேரையும் கைது செய்திருந்தனர்.

இந்த 17 பேரில் ஒருவர் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஜாபர் உசேன். இவரது பெற்றோர் தங்களது மகனை மீட்டு தர கோரி ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர்.

இதனையடுத்து, அவர்கள் அனைவரையும் மீட்க இந்திய வெளியுறவுத் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்டிருந்த 17 தமிழர்களும் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை மூலமாக மீட்கப்பட்டு விமானம் மூலம் இன்று தமிழகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+