பொங்கல் லீவ் முடிஞ்சிருச்சு… வேலைக்கு போகணுமப்பு… ரயில், பஸ்சில் முண்டியடித்த கூட்டம்
சென்னை: பொங்கல் பண்டிகையை சொந்த ஊர் கொண்டாட இந்த ஆண்டு 8.7 லட்சம் பேர் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கிறது ஒரு புள்ளிவிபரம். பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி முடித்த மக்கள், விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்ப முடியாமல் அவதிக்கு ஆளாகினர்.
திருநெல்வேலி, நாகர்கோவில், விருதுநகர், மதுரை உள்ளிட்ட ஊர்களில் ரயில் நிலையங்களிலும், பேருந்து நிலையங்களிலும் ஞாயிற்றுக்கிழமை பயணிகள் அலைமோதினர்.
ரயில்கள், பேருந்துகளில் போதிய இடவசதியின்றி அவதிப்பட்ட பயணிகள் பொங்கல் விடுமுறை கொண்டாடிய சந்தோசத்தையே இழந்துவிட்டனர்.
தை திருநாள் கடந்த 15ஆம் தேதி கொண்டாடப்பட்டது. நான்கு நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் பொங்கல் பண்டிகையை கொண்டாட வெளியூரில் வேலை பார்க்கும் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர் சென்றனர்.

குறிப்பாக சென்னை, பெங்களூரு, கோவை போன்ற ஊர்களில் வேலை பார்க்கும், ஆண்களும், பெண்களும் தங்கள் சொந்த ஊரில் குவிந்தனர். விடுமுறை முடிந்ததால் பலர் வேலைக்கு பார்க்கும் இடத்துக்கு செல்ல ஞாயிறன்று மாலை பஸ், ரயில்களில் முன்பதிவு செய்தனர்.
காலை முதலே காத்திருப்பு
முன்பதிவு செய்யாதவர்களுக்கும் காலை முதலே ரயில்நிலையங்கள், பேருந்து நிலையங்களில் குவிந்தனர். இன்று வேலை நாள் என்பதால் திருநெல்வேலி ரயில் நிலையத்தில் காலையில் புறப்பட்ட குருவாயூர் ரயிலில் இடம் கிடைக்காமல் கூட்டம் அலைமோதியது.
இடமில்லையே
முன்பதிவு செய்யாதவர்களும் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் ஏறியதால் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மாலை புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் தென்மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பயணித்தனர். அனைத்து பேருந்துகளிலும் கூட்டம் அலைமோதியது.
ரிசர்வ் செய்தவர்கள்
சென்னை, திருச்சி, பெங்களுரு போன்ற ஊர்களுக்கு செல்பவர்கள் ஏற்கனவே 3 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்திருந்தனர். இவர்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை.
ஆனால் முன்பதிவு செய்யாமல் பயணம் செய்தவர்கள் நிலைதான் மோசமாகி போனது. அவர்களால் நிற்க கூட முடியாத அளவுக்கு முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் கூட்டம் அலைமோதியால் பலர் தள்ளுமுள்ளில் சிக்கி தடுமாறினர்.
சிறப்பு ரயில்கள்
பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு நேற்று இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இது போல் நெல்லை வழியாக திருவனந்தபுரத்தில் இருந்து 16 பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த பேருந்துகளிலும் முன்பதிவு நிரம்பி விட்ட நிலையில் பலருக்கு இடம் கிடைக்கவில்லை.
சிறப்பு பேருந்துகள்
தென்காசி, செங்கோட்டை பணிமனை மூலம் இயக்கப்படும் பேருந்துகளிலாவது இடம் கிடைக்குமா என பலர் முண்டியடித்தனர். செங்கோட்டையில் இருந்து 12 பேருந்துகளும், தென்காசியில் இருந்து 7 பேருந்துகளும் பொங்கலை ஓட்டி இயக்கப்பட்டன. ஆனாலும் இடம் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டனர்.
நாகர்கோவிலில்
நாகர்கோவிலில் இருந்து வழக்கம்போல் அரசு விரைவுப் பேருந்துகள் இயக்கப்பட்டன. எனினும் சென்னை, பெங்களூரு செல்லும் பயணிகள் ஏற்கெனவே முன்பதிவு செய்து இருந்தனர். அரசு போக்குவரத்துக் கழகம் நாகர்கோவில் மண்டலம் சார்பில் சென்னை, திருச்சி, மதுரை, திருப்பூர், கோவை உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
ரயில் இல்லாட்டி பஸ்
நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் சென்னை செல்ல பயணிகள் குவிந்தனர். கன்னியாகுமரி, அனந்தபுரி உள்ளிட்ட ரயில்களில் முன்பதிவு செய்த பயணிகளைத் தவிர ஏனைய பயணிகள் முன்பதிவில்லா பெட்டியில் ஏற முடியாமல் அவதிப்பட்டனர்.
தொங்கிக்கிட்டாவது
ரயில்வே போலீஸார் பயணிகள் ஏறுவதற்கு பாதுகாப்பு அளித்தனர். எனினும் ரயில் புறப்படும்போது பயணிகள் ரயிலில் தொங்கியபடியே சென்றனர். மாலை 6 மணி வரை ரயிலில் இடம் கிடைக்காதவர்கள், பேருந்தில் செல்ல வடசேரிக்கு வந்தனர். இதனால் வடசேரி பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
ஓட்டை உடைசலாய்
சென்னைக்கு இயக்கப்பட்ட அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பெரும்பாலானவை திருநெல்வேலி -நாகர்கோவில் இடையே இயக்கப்பட்டவை. இந்த பேருந்துகளில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தும், இருக்கைகள் போதிய வசதி இல்லாமலும் இருந்ததால், பயணிகள் இந்த பேருந்துகளில் பயணிக்க தயக்கம் காட்டினர். எனினும் வேறுவழியின்றி பலர் இடம் கிடைத்த பேருந்துகளில் வெளியூர்களுக்குச் சென்றனர்.
ஆம்னிபஸ்களில் கொள்ளை
பயணிகளின் கூட்ட நெரிசலை கவனித்த ஆம்னிபஸ்கள் கட்டணங்களை உயர்த்தி கொள்ளை லாபம் சம்பாதித்தனர். அவசரத்திற்கு வேறு வழியில்லை என்று நினைத்தவர்கள் அதிக கட்டணம் செலுத்தி சென்னைக்கு திரும்பினர். இந்த ஆண்டு பொங்கலை கொண்டாட 8.7 லட்சம் பேர் சொந்த ஊர் சென்றுள்ளதாக தெரிவிக்கிறது ஒரு புள்ளிவிபரம்.
திருப்பூர், கோவை
தென்மாவட்டங்களில் இருந்து திருப்பூர், கோவைக்கு திரும்பிய தொழிலாளர்களும் பேருந்துகள் கிடைக்காமல் சிரமத்திற்கு ஆளாகினர். ஒருவழியாக அடித்து பிடித்து பேருந்தில் ஏறி கிளம்பினர்.
-
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார்.. போர் பதற்றத்துக்கு மத்தியில் ரஷ்யா அறிவிப்பு! -
சவுதிக்கு விழுந்த அடி! ஹார்முஸ் ஜலசந்திக்கு பதில் செங்கடல்.. அடிமடியில் கைவைத்த ஈரானால் ரூட் மாற்றம் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? மானியம் வங்கி கணக்கிற்கு வராமல் போவது ஏன்? சமையலறையில் டிஜிட்டல் மர்மம் -
மீடியாவில் பேசாதீங்க.. தடுக்கப்படும் சங்கீதா.. விஜய் தரப்பில் 'மூவ்'? கோடிகளில் எகிறும் சமாதான தூது? -
தேனியில் ஓ பன்னீர்செல்வம் நினைத்தே பார்க்காதது.. கூண்டோடு விலகிய ஆதரவாளர்கள் எடுத்த முடிவு -
பயிர் கடன் ரத்து, உயர் கல்வி ஏற்பு .. விவசாயிகளுக்கான தவெக வாக்குறுதிகளை வெளியிட்ட விஜய் -
நெருப்பு வளையத்தில் இந்தியா! மோடி எடுத்த முடிவால்! போருக்குள் இழுக்க பார்க்கும் இஸ்ரேல்! கையை மீறுது -
ராஜ்யசபா எம்.பி ஆகும் 6 பேர் யார் யார்? திமுக, அதிமுக, தேமுதிக, பாமக இன்று அறிவிக்க திட்டம்! -
சிறகடிக்க ஆசை: விஜயாவிடம் நறுக்குன்னு ஸ்ருதி கேட்ட கேள்வி.. அண்ணாமலை எடுத்த முடிவு! மீனாவின் விபரீத செயல் -
5 ஸ்டார் ஹோட்டல் மாதிரி சில்லென்ற சொகுசு: சென்னை டூ நெல்லை ரயில் பயணிகளுக்கு ரூ.25ல் பெரிய சர்ப்ரைஸ் -
கருணாஸ் காட்டில் மழை தான்.. கடைக்கண் பார்வையை திருப்பிய ஸ்டாலின்! கண்டிப்பா அங்க தான் போட்டியாம்! -
ஈரானை பார்த்து நடுங்கிய டிரம்ப்! அவசரமாக இந்தியா கையில் எடுத்த வெட்டுக்கிளி ஆயுதம்! ரெடியான சேஷ்நாக்












Click it and Unblock the Notifications