வங்கியில் 19 கிலோ தங்கநகைகளை கொள்ளையடித்து ஹோட்டல் அதிபரான கொள்ளையன் கைது
புதுக்கோட்டை: கீரனூர் அருகே குளத்தூரில் உள்ள தனியார் வங்கியில் 19 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்தவர்களில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை அடுத்து உள்ள குளத்தூரில் இருக்கும் தனியார் வங்கிக்குள் கடந்த நவம்பர் மாதம் 30ம் தேதி இரவு புகுந்த மர்ம நபர்கள் லாக்கரில் இருந்த நகைகளை மூட்டைகளாக கட்டி எடுத்துச் சென்றனர். நகை மூட்டைகளுடன் சென்ற கொள்ளையர்களை இரவு நேர ரோந்து பணியில் இருந்த போலீசார் பார்த்து துரத்தினர்.

அப்போது கொள்ளையர்கள் ஒரு மூட்டையை மட்டும் போட்டுவிட்டு ஓடிவிட்டனர். அவர்கள் விட்டுச் சென்ற மூட்டையில் 31 கிலோ தங்க நகைகள் இருந்தது. ஆனால் அவர்கள் 19 கிலோ தங்க நகைகளுடன் ஓடிவிட்டனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள தனியார் வங்கியில் சிலர் கொள்ளையடிக்க முயன்றபோது அலாரம் அடித்ததால் தாங்கள் கொண்டு வந்த கட்டிங்பிளேடு, ஆக்சாபிளேடு உள்ளிட்ட பொருட்களை போட்டிவிட்டு ஓடிவிட்டனர்.
அந்த பொருட்கள் திருச்சி பாலக்கரையில் உள்ள கடை ஒன்றில் வாங்கப்பட்டதை கண்டுபிடித்த நத்தம் போலீசார் இது குறித்து திருச்சி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். நத்தம் போலீசார் திருச்சி போலீசாருடன் சேர்ந்து அந்த கடைக்கு சென்று விசாரணை நடத்தியதுடன் மீண்டும் யாராவது அதே பொருட்கள் வாங்க வந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் கீரனூர் அருகே உள்ள ஒடுக்கூரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(38) திருச்சி பாலக்கரையில் உள்ள அந்த கடைக்கு சென்று கட்டிங்பிளேடு, ஆக்சாபிளேடு உள்ளிட்டவற்றை கேட்டுள்ளார். கடைக்காரர் உடனே திருச்சி போலீசாருக்கு தகவல் கொடுக்க அவர்கள் விரைந்து வந்து கோபாலகிருஷ்ணனை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் நத்தத்தில் உள்ள தனியார் வங்கியில் கொள்ளையடிக்க முயன்றதுடன், கீரனூர் அருகே உள்ள குளத்தூரில் இருக்கும் தனியார் வங்கியில் 19 கிலோ தங்கநகைகளை திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து திருச்சி போலீசார் அவரை கீரனூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கீரனூர் போலீசார் விசாரித்தபோது, கொள்ளையடித்த நகைகளை விற்று அவர் ரூ.2 கோடியில் சொகுசு பங்களா கட்டியதுடன் ஹோட்டல் நடத்தி வருவதும், 4 கார்கள் வாங்கியதும் தெரிய வந்துள்ளது. கோபாலகிருஷ்ணனை கைது செய்த போலீசார் அவரின் கார் ஒன்றை பறிமுதல் செய்தனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications