மகா வக்கிரமான பேஸ்புக் பக்கத்தை வைத்திருந்த 19 வயது இளைஞர் கைது.. சென்னையில் பரபரப்பு
சென்னை: சென்னையில் மிகவும் வக்கிரமான ஒரு ஆபாச பேஸ்புக் பக்கத்தை வைத்திருந்த 19 வயதேயான இளைஞரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். இவர் இப்போதுதான் டிப்ளமா முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆபாச இணையதளங்கள் நாடு முழுவதும் பெருகி விட்டன. இணையதளங்கள் மட்டுமல்லாமல் பேஸ்புக்கிலும் கூட ஆபாசங்கள் பெருகி ஓடிக் கொண்டிருக்கின்றன.

சமீபத்தில் இப்படிப்பட்ட ஆபாச இணையதளங்களை மத்திய அரசு பிளாக் செய்தது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு எழவே மத்திய அரசு தனது முடிவை கைவிட்டது. சிறார்களை ஆபாசமாக சித்தரிக்கும் இணையதளங்கள் மட்டும் முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சென்னையில் மணிகண்ட பிரபு என்ற 19 வயது இளைஞரை சென்னை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர். இவர் இப்போதுதான் டிப்ளமோ பொறியியல் படிப்பை முடித்துள்ளார். கோவையைச் சேர்ந்தவர். சென்னையிலிருந்து இவர் "சின்னப் பொண்ணை... எப்படி" என்ற பெயரில் மிகவும் அறுவெறுப்பான பக்கத்தை நடத்தி வந்துள்ளார்.
அதில் சிறுமிகளுடன் செக்ஸ் வைத்துக் கொள்வது தொடர்பான செய்திகளையும், புகைப்படங்களையும், தொலைபேசிகளையும் போட்டு வைத்திருந்தார் இந்த வக்கிரம் பிடித்த இளைஞர்.
இதுகுறி்த்து சைபர் கிரைம் போலீஸாருக்குப் புகார் வரவே அவர்கள் விசாரணை நடத்தி தற்போது மணிகண்ட பிரபுவைக் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications