ஆர்.கே. நகரில் 1947 போலி வாக்காளர்கள் - திமுகவை பாராட்டிய ஹைகோர்ட்
போலி வாக்காளர்களை கண்டறிந்த திமுகவுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. ஆர்.கே நகரில் உள்ள போலி வாக்காளர்களை நீக்கக்கோரி திமுக வழக்கு தொடர்ந்தது.
சென்னை: ஆர்.கே நகரில் சட்டசபைத் தொகுதியில் போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலி வாக்காளர்களை கண்டறிந்த திமுகவுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது
சென்னை ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது. ஆர்.கே. நகர் சட்டசபைத் தொகுதியில் ஆர்.கே.நகரில் 5117 போலி வாக்காளர்களை நீக்கவில்லை என கூறி திமுக வேட்பாளர் மருதுகணேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியிருந்த தலைமை தேர்தல் அதிகாரி லக்கானி, 1,947 வாக்காளர்கள் பெயர் இரண்டு இடங்களில் இருக்கின்றன, அவை நீக்கம் செய்யப்பட்டுவிட்டன எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது ஆர்.கே நகரில் 1947 போலி வாக்காளர்கள் நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் போலி வாக்காளர்களை சேர்த்த அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மீது வழக்குப் பதிவு செய்யவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆர்.கே. நகர் தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த வேண்டும் என்றும் தேர்தலில் ஒரு வாக்கு கூட முடிவை மாற்றும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications