தமிழக சிறைகளில் இருந்த 2,500 விசாரணை கைதிகள் விடுதலை!
சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் நீண்டகாலமாக சிறைகளில் இருந்த விசாரணை கைதிகள் 2,500-க்கும் மேற்பட்டோர் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்தியா முழுவதும் நீண்டகாலமாக சிறையில் இருக்கும் விசாரணை கைதிகளை விசாரித்து, அவர்களுடைய தண்டனை காலத்தில் பாதிக்கு மேல் சிறையில் இருந்தால் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள மத்திய மற்றும் கிளைச் சிறைகளில் லோக் அதாலத் முறையில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் 3 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு உட்பட்ட சிறிய வழக்குகள் விசாரணை நடத்தப்பட்டு உடனடி தீர்வு காணப்பட்டது.

2,500 பேர் விடுதலை
தமிழகம் முழுவதும் சுமார் 3 ஆயிரம் வழக்குகள் மீது விசாரணை நடத்தப்பட்டு, 2,500-க்கும் மேற்பட்டோர் விடுதலை செய்யப்பட்டனர்.

சென்னையில் 850 பேர்..
சென்னை புழல் மத்திய சிறைச்சாலை மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம் கிளைச் சிறைகளில் நடந்த லோக் அதாலத்தில் சுமார் 850 விசாரணை கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

சேலம், நெல்லையில்..
சேலம் மத்திய சிறையில் நடந்த விசாரணையில் 455 விசாரணை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். நெல்லை பாளையங்கோட்டை சிறையில் நடந்த விசாரணையில் 174 விசாரணை கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

கடலூர், மதுரையில்..
A total of 2.500 undertrials were released at the annual prison adalats held in Tamilnadu prisons.












Click it and Unblock the Notifications