தமிழக பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கில் 2 பேர் கைது!
பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் தேர்வு முறைகேட்டில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் 2பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்
சென்னை: தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர்கள் தேர்வு முறைகேடுகள் தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்
தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு விரிவுரையாளர் தேர்வு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் உமா கொடுத்த புகாரின் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 27ம் தேதி கிழக்கு முகப்பேரை சேர்ந்த கால் டாக்ஸி டிரைவர் கணேசன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின் பேரில், மதிப்பெண்களை தவறாக பதிவிட்ட டேட்டா என்ட்ரி ஆப்ரேடர் ஷேக் தாவூத் நாசரை போலீசார் கைது செய்ய முயன்றனர். ஆனால் அவர் தாமாகவே முன்வந்து பொன்னேரி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இவர்கள் இருவரும் அளித்த தகவலின் பேரில் மேலும் இருவர் என நான்கு பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணையும் இடையில் மேற்கொண்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த முறைகேட்டிற்கு மூளையாக செயல்பட்ட நாதன் என்பவரை போலீசார் தேடி வந்தனர்.
போலீசாரால் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகளான சென்னை சிட்லபாக்கத்தை சேர்ந்த நாதனையும் அவனின் உதவியாளரான சென்னை கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த பரமசிவம் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இவரிடமும் தீவிர விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள போலீசார், இந்த முறைகேட்டில் பல உயர்கல்வித்துறையை சேர்ந்த அதிகாரிகளும், கல்வித்துறையை சேர்ந்தவர்களும் சிக்குவார்கள் என்று எதிர்ப்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications