வேலூர்: வீடு வாடகைக்கு எடுத்து விபசாரம் செய்த இருவர் கைது
வேலூர்: வேலூர் அருகே வாடகை வீட்டில் பெண்களை வைத்த விபச்சாரம் செய்த இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த குமரப்பாநகர் பகுதியில் விபசாரம் நடைபெறுவதாக காட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் காட்பாடி போலீசார் குமரப்பாநகரில் திடீர் சோதனை செய்தனர். அப்போது அங்கு பிரியா (வயது 30) என்பவர் வீடு வாடகைக்கு எடுத்து 2 இளம் பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வந்தது தெரியவந்தது.
அதை தொடர்ந்து விபசாரத்தில் ஈடுபட்ட சித்தூர் தோட்டப்பாளையம் மற்றும் வேலூர் விருப்பாட்சிபுரம் பகுதிகளை சேர்ந்த 2 இளம்பெண்களையும் மீட்டு பெண்கள் காப்பு விடுதிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபசார விடுதி நடத்திய பிரியா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த கழிஞ்சூர் பகுதியை சேர்ந்த பாரதிமோகன் (38) ஆகியோரை கைது செய்தனர்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications