மின் கோபுரம் அமைக்கும் பணியின்போது கீழே விழுந்து 2 வடமாநில தொழிலாளர்கள் பலி
திண்டுக்கல்: திண்டுக்கல் வேடசந்தூர் அருகே உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்ட இரண்டு வட மாநில தொழிலாளர்கள் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் சிக்கி அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தில் இருந்து உடுமலைபேட்டைக்கு மின் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது இதற்கான பணி திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், ராமக்கவுண்டன்பட்டியில் நடக்கிறது.

இங்குள்ள பழனிச்சாமி என்பவரது தோட்டத்து பகுதியில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 15 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று மாலை 4 மணிக்கு 60 அடி உயர மின் கோபுரத்தில் நின்று பணியாற்றிக் கொண்டிருந்தனர். எதிர்பாராத விதமாக கோபுரத்தில் இருந்த ஒரு இரும்பு பிடிப்பு துண்டித்து விலகியுள்ளது.
இதனால் அதில் தொங்கியபடி வேலை பார்த்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சாகிர் அலி திடீரென கீழே விழுந்ததில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். அதே நேரம் அருகில் வேலை பார்த்த சமிரூல் இஸ்லாம் என்பவரும் அப்போது ஏற்பட்ட அதிர்வு காரணமாக கீழே விழுந்து இறந்தார். மேலும் ரகீப் என்பவரும் கீழே விழுந்ததில் பலத்த அடிபட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications