For Daily Alerts
Just In
நீடாமங்கலம் அருகே பைக் மீது கார் மோதி விபத்து - இருவர் பலி
நீடாமங்கலம் அருகே பைக் மீது கார் மோதி 2 பேர் உயிரிழந்தனர்.
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே நடந்த சாலைவிபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீடாமங்கலம் அருகே உள்ளது கோவில்வெண்ணி. இங்கு சாலையில் இன்று காலை கல்லூரி பேராசிரியர் சாமிநாதன், முன்னாள் ராணுவ வீரர் குணசேகரன் ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே அதிவேகமாக வந்த கார் ஒன்று நிலைதடுமாறி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் வாகனத்தில் சென்ற சாமிநாதனும், குணசேகரனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார் உடனடியாக உயிரிழந்தவர்களின் சடலங்களை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
English summary
Two persons were killed on the spot in the road near Neethamangalam in Thiruvarur district. Two people were on a bike near Kovilvani this morning. Two of the two men who were riding a car crashed suddenly on the spot. The investigation is in progress.
Story first published: Saturday, May 5, 2018, 9:31 [IST]