கொடைக்கானலில் போதைக் காளான்களை அதிகளவில் சாப்பிட்ட 2 கேரள மாணவர்கள் பலி.. சுற்றுலா வந்தபோது பரிதாபம்
கொடைக்கானலில் தனியார் விடுதியில் தங்கி அதிகளவில் போதை காளான்களை சாப்பிட்ட கேரளாவைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கொடைக்கானல்: கொடைக்கானலில் சுற்றுலா வந்த இடத்தில் அதிகளவில் போதைக்காளான் சாப்பிட்ட கேரள மாணவர்கள் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கேரளா மாநிலம் ஆழப்புலாவைச் சேர்ந்த மாணவர்கள் 13 பேர் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சுற்றுலா வந்துள்ளனர். வட்டக்கானல் பகுதிக்குச் செல்லும் வழியில் போலீஸ் சோதனை சாவடி அருகே ஒரு தனியார் விடுதியில் அவர்கள் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

அம்மாணவர்கள் கடந்த இரண்டு நாட்களாகவே கஞ்சா மற்றும் போதைக் காளான்களை அதிக அளவில் உபயோகித்ததாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில், இன்று காலை அம்மாணவர்களில் இரண்டு பேர் அளவுக்கு அதிகமான போதைப் பொருள் எடுத்துக் கொண்டதால் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உயிரிழந்த மாணவர்களின் பெயர் தாமஸ் (21) மற்றும் ஜிபின் (25) ஆகும். இதேபோல், அணில் (21), மெல்வின் (21) மற்றும் பினு (21) ஆகிய மூன்று மாணவர்கள் ஆபத்தான நிலையில் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்கு தேனி கானாவிலக்கு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த பலர் கொடைக்கானல் நகரில் பல இடங்களில் தங்கி அனுமதி இல்லாமல் விடுதிகளை நடத்தி கொடைக்கானலுக்கு வரும் இளைஞர்களை போதைகளுக்கு அடிமையாக்கி வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு உள்ளது.

நகராட்சி நிர்வாகமும் கொடைக்கானல் காவல்துறையினரும் இணைந்து போதைக் களமாக மாறி வரும் கொடைக்கானலையும் இங்கே வரும் இளைஞர்களையும் காப்பாற்ற தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், கேரளாவைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் போதைக் காளானுக்கு உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications