நாகையில் இரு தரப்பு மீனவர்கள் மோதல்... 500 பேர் கைது
மீன்பிடித் துறைமுகங்களை பயன்படுத்துவதில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து நாகையில் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 3 படகுகளுக்கு தீவைத்து கொளுத்தப்பட்டது.
நாகை: நாகையில் இரு தரப்பு மீனவர்களிடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, எதிர்த்தரப்பினரை கைது செய்யக்கோரி, பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு, மற்றொரு தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
அக்கரைப்பேட்டை மற்றும் நம்பியார் நகர் மீனவ கிராமங்களுக்கிடையே பழைய மற்றும் புதிய மீன்பிடித் துறைமுகங்களை பயன்படுத்துவதில் பிரச்சனை இருந்துள்ளது.

அண்மையில் இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், நேற்று மீண்டும் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இருதரப்பு மீனவர்களும் அரிவாளால் வெட்டிக் கொண்டதில், படுகாயமடைந்த 6 பேர் நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேலும் 29 பேர் காயமடைந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.
நாகப்பட்டினம் துறைமுகத்தில் நின்றிருந்த 3 படகுகளுக்கு இரு தரப்பினை சேர்ந்த சிலர் தீ வைத்துள்ளனர். தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று உடனடியாக தீயை அணைத்ததால் பெரும்சேதம் தவிர்க்கப்பட்டது.
இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை இரவு நாகை மருத்துவமனையில் திரண்ட இரு கிராம மக்களும் ஒருவரைக்கொருவர் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், காயமடைந்தவர்களை மேல்சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில், இன்று காலையில் நாகை பேருந்து நிலையத்தை, 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் முற்றுகையிட்டு, எதிர்த்தரப்பினரை கைது செய்யக்கோரி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸார் தடியடி நடத்தினர். மீனவர்கள் மோதல் தொடர்பாக 500 பேரை போலீஸார் கைது செய்தனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications