சென்னையில் மீண்டும் 2 மணி நேரம் மின்வெட்டு அமல்!
சென்னை: சென்னையில் வரும் திங்கட்கிழமை முதல் 2 மணி நேரம் மின்வெட்டு அமலாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
''பல்வேறு மின் நிலையங்களில் பழுது ஏற்பட்டிருப்பதால் மின் உற்பத்தி குறைந்துள்ளது. மேலும் பருவ மழை குறைந்ததாலும் மின் உற்பத்தி குறைந்துள்ளது.

இதனால் பெரிய அளவில் மின் பற்றாக்குறை ஏற்பட்டது. எனவே, சென்னையில் வரும் டிசம்பர் 2ஆம் தேதி (திங்கட்கிழமை) முதல் காலை 8 மணியிலிருந்து மாலை 6 மணி வரை சுழற்சி முறையில் மின் வெட்டு அமல்படுத்தப்படுகிறது.
'ஒவ்வொரு பகுதியில் 2 மணி நேரம் இந்த மின்வெட்டு அமலில் இருக்கும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழகம் முழுவதும் சென்னை நீங்கலாக நகர் புறங்களில் 6 மணிநேரமும், கிராமப்புறங்களில் 8 மணிநேரமும் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுகிறது. சென்னைவாசிகளும் வரும் திங்கட்கிழமை முதல் மின் வெட்டுப் பிரச்சினையை சந்திக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications