கண் எதிரே வந்த மரணம்.. கட்டிப்பிடித்தபடி உயிரிழந்த இரு ஆண் தொழிலாளர்கள்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை மவுலிவாக்கத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு நொறுங்கி விழுந்த இடத்திலிருந்து கட்டிப்பிடித்த நிலையில் இரண்டு ஆண் தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

கண் எதிரே மரணத்தை சந்தித்த அதிர்ச்சியில் இருவரும் கட்டிப்பிடித்த நிலையில் மரணத்தை சந்தித்திருக்கலாம் என்று தெரிகிறது.
நேற்று 5 வது நாள் மீட்புப் பணியின்போது தரைத் தளத்தில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் தோண்டியபோது கட்டிப்பிடித்த நிலையில் இருந்த 2 ஆண் சடலங்களை மீட்பு குழுவினர் மீட்டனர்.
கட்டிடம் இடிந்து விழுந்தபோது அருகே நின்று பேசிக்கொண்டிருந்தவர்கள் சாவை கண் எதிரே பார்த்த அச்சத்திலும், அதிர்ச்சியிலும் இருவரும் கட்டிப்பிடித்தபடி இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று தெரிகிறது. அவர்கள் இருவரும் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications