பெண் செய்தி வாசிப்பாளர் கொடுத்த பாலியல் புகார்: சன் டி.வி. நிர்வாகிகள் மேலும் 2 பேர் மீது வழக்கு!!
சென்னை: சூர்யா டி.வி. பெண் செய்தி வாசிப்பாளர் கொடுத்த பாலியல் புகாரின் பேரில் சன் டி.வி. குழும நிர்வாகிகள் 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சன் டி.வி. குழுமத்துக்குச் சொந்தமான மலையாள செய்தி சேனலான சூர்யா டி.வி.யில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் தீபி. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள அலுவலகத்தில் தீபி பணிபுரிந்தார்.
இந்நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த வாரம் தீபி கொடுத்த புகார் மனுவில், சன். டி.வி. சி.ஓ.ஓ. பிரவீன் மற்றும் சிலர் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கின்றனர். எனக்கு தரவேண்டிய சம்பள பணத்தையும் கொடுக்க மறுக்கின்றனர் என்று கூறியிருந்தார்.

இந்தப் புகாரின்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் பிரவீனை கடந்த 26-ந் தேதி சென்னை அண்ணாநகரில் கைது செய்தனர். அவர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் தீபியின் புகாரின் பேரில் சன் டி.வி. நிறுவனத்தின் மனிதவளப் பிரிவு துணைத் தலைவர் கண்ணன், சூர்யா டிவி தலைமை நிர்வாகி டேவிட் சாஜு ஆகியோர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்களை கைது செய்வதற்கான முயற்சிகளில் போலீசார் இறங்கியுள்ளனர்.
பிரவீனை போலீசார் கைது செய்ய இருப்பதாக தெரியவந்தது முதல் இருவரும் அலுவலகத்துக்கு விடுப்பு கொடுத்துவிட்டு பணிக்கு வரவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஏற்கெனவே சன் டி.வி. குழுமத்தின் சன் நியூஸ் சேனலில் அகிலா என்ற பெண் செய்தி வாசிப்பாளர் பாலியல் புகார் கொடுத்ததால் சன் நியூஸ் எடிட்டராக இருந்த ராஜா, அவரது உதவியாளர் வெற்றிவேந்தன் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் இருவரும் ஜாமீனில் வெளிவந்தனர்.
இந்த நிலையில் சன். டி.வி. குழும தலைமை நிர்வாகிகள் மூவர் மீண்டும் பாலியல் புகாரில் சிக்கியிருப்பது பத்திரிகை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications