பழனி அருகே 2 பேர் மர்ம மரணம்... கூடு விட்டு கூடு பாயும் வித்தையின் போது இறந்தார்களா?
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மர்மமான முறையில் இருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பழனி அருகே ஆயக்குடியைச் சேர்ந்தவர்கள் ராமகிருஷ்ணன்(37), ராஜ்குமார்(26). இவர்கள் இருவரும் ஆன்மீகத்தில் அதீத நாட்டமுள்ளவர்கள் என கூறப்படுகிறது. இவர்கள் அடிக்கடி பொன்னிமலைக்கரடு என்ற மலைப்பகுதிக்கு சென்று தியானம் செய்வதை வழக்கமான கொண்டிருந்தார்களாம்.

இந்நிலையில் கடந்த மாதம் 29-ஆம் தேதி வழக்கம் போல தியானம் செய்ய சென்ற அவர்கள் அடுத்த நாள் வரை வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவர்களது குடும்பத்தினர் அவர்களை தேடிப்பார்த்தபோது, அவர்கள் தியானம் செய்யும் இடத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
முன்னதாக, இருவரும் கூடுவிட்டு கூடு பாயும் வித்தை கற்றுவருவந்ததாக அவர்களின் உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்த இருவரின் உடலிலும் காயம் ஏதுவும் இல்லாததால், அவர்கள் கூடுவிட்டு கூடு பாயும் வித்தையின் போது இறந்திருப்பார்களோ என கேள்வி எழுந்துள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications