கருப்பசாமி பாண்டியனைப் பிடிக்க 2 தனிப்படைகள் - தீவிர தேடுதல் வேட்டை

நெல்லை டவுன் திமுக பிரமுகர் நாலடியார் மகள் தமிழரசி 28. இவருக்கு கட்சியில் பொறுப்பு தருவதாக கூறி குற்றாலம் பங்களாவிற்கு அழைத்த மாவட்டச் செயலாளர் கருப்பசாமிபாண்டியன், அவரிடம் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து திமுக பொருளாளர் ஸ்டாலினிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால் போலீசில் புகார் செய்தார் தமிழரசி. குற்றாலம் போலீசார் கருப்பசாமி பாண்டியன் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை பிரிவு உள்பட ஜாமீனில் வெளிவரமுடியாத வழக்குகள் பதிவு செய்தனர்.
அவரை கைது செய்ய தனிப்படை போலீசார் கருப்பசாமி பாண்டியனின், குற்றாலம் பங்களா உள்ளிட்ட இடங்களில் தேடினர். அவர் வெளி மாநிலத்திற்கு சென்று தலைமறைவாகியிருக்கலாம் என தகவல் போலீசாருக்கு கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து தென்காசி ஏ.எஸ்.பி.,அரவிந்தன், குற்றாலம் இன்ஸ்பெக்டர் மன்னவன் ஆகியோர் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு கருப்பசாமி பாண்டியனை தேடிவருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications