தூத்துக்குடியில் அடுத்த பரபரப்பு... கல்லூரி முதல்வருக்கு கொலை மிரட்டல்- 2 மாணவர்கள் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடியில் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் கொலை செய்யப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு கல்லூரி முதல்வருக்கு மாணவர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் மறவன்மடத்தில் உள்ள பிஷப் கால்டுவெல் கல்லூரியின் முதல்வர் செல்லையா. அந்த கல்லூரியில் பி.எஸ்.சி. ஐ.டி. இரண்டாம் ஆண்டு படிக்கும் தூத்துக்குடி மட்டக்கடை பகுதியைச் சேர்ந்த சந்தனமாரியப்பன் மற்றும் எம்.எஸ்.சி. படிக்கும் நயினார்விளை பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் ஆகியோர் நேற்று முன்தினம் சில மாணவிகளை கேலி செய்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து செல்லையா அந்த 2 மாணவர்களையும் கண்டித்ததோடு பெற்றோரை அழைத்து வந்தால் மட்டுமே கல்லூரிக்குள் அனுமதிப்பேன் என்று தெரிவித்தாராம். இதையடுத்து அந்த 2 மாணவர்களும் தூத்துக்குடி போல்டன்புரத்தைச் சேர்ந்த மரியவளவன் என்பவரை அழைத்துச் சென்று அவர் தங்களின் மாமா என்று பொய் சொல்லியுள்ளனர். மரியவளவன் நெல்லை அருகே உள்ள கீழ வல்லநாடு இன்பன்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரியின் கப்பல் ஊழியர் ஆவார். அந்த இன்பன்ட் ஜீசஸ் கல்லூரியின் முதல்வர் சுரேஷ் குமார் 3 மாணவர்களால் நேற்று வெட்டிக் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் செல்லையா மரியவளவனிடம் மாணவர்கள், குடும்ப விஷயங்கள் குறித்து கேட்டபோது அவர் கூறிய பதில்கள் சந்தேகத்தை எழுப்பின. இதனால் பெற்றோரை அழைத்து வருமாறு செல்லையா மாணவர்களிடம் தெரிவித்துள்ளார். ஆனால் மாணவர்களோ மரியவளவனுடன் சேர்ந்து செல்லையாவை அடிக்க முயன்றுள்ளனர். மேலும் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
உடனே இது குறித்து செல்லையா புதுக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் அந்த 3 பேரையும் கைது செய்தனர்.
-
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக?












Click it and Unblock the Notifications